spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ஜாமினில் எடுத்த வக்கீலை வீடு புகுந்து சரமாரியாக வெட்டிய ரவுடி தடுக்க வந்த மனைவிக்கும் வெட்டு.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஜாமினில் எடுத்த வக்கீலை வீடு புகுந்து சரமாரியாக வெட்டிய ரவுடி தடுக்க வந்த மனைவிக்கும் வெட்டு. வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடி, ஜாமினில் வெளியே எடுத்து விட்ட வழக்கறிஞரையும் அவரது மனைவியையும் வீடு தேடி சென்று சரமாரியாக வெட்டிய சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாநகர் சின்னத்திருப்பதி, புதிய குருக்கள் காலனியை சேர்ந்தவர். ஆஷித்கான் (30) இவர் சேலம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவரும் ,இவரது மனைவி பத்மப்பிரியா ஆகிய இருவரும் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்தனர். அப்போது அவரது கட்சிக்காரரான பிரபல ரவுடியான செவ்வாய்பேட்டையை சேர்ந்த ஜோசப் என்கிற பாலாஜி(24) வக்கீல் வீட்டிற்கு வந்துள்ளார்.

பின்னர் வழக்கறிஞர் ஆசித்கானிடம் பேசிக் கொண்டிருந்துள்ளார் . சிறிது நேரத்தில் வழக்கறிஞர் ஆசித்கானுக்கும், ரவுடி பாலாஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென வழக்கறிஞரை , ரவுடி பாலஜி தாக்கியுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த வக்கீல் மனைவி பத்மபிரியா தடுக்க வந்துள்ளார்.

அமோக விற்பனை – ஆன்லைனில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம்.

அவருக்கும் கையில் வெட்டி விழுந்துள்ளது. இதனால் அவர்கள் கூச்சலிட்டுள்ளனர். இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் தடுக்க ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதைக் கண்ட ரவுடி பாலாஜி திடீரென தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தார். பின்னர் வழக்கறிஞரையும் அவரது மனைவியையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கன்னங்குறிச்சி போலீசார் சம்பவம் இடம் சென்று விசாரணை நடத்தினர்.

வழக்கறிஞர் ஆஷித்கான் மற்றும் அவருடைய மனைவி ஆகியோரை வெட்டி விட்டு தப்பிய ரவுடி பாலாஜி மீது நான்கு பிரிவில் வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர். ரவுடி பாலாஜி மீது ஏற்கனவே தர்மபுரியில் இரட்டை கொலை வழக்கும், சேலம் ஆட்டையாம்பட்டியில் ஒரு கொலை வழக்கும், செவ்வாய்பேட்டை போலீசில் வழிபறி வழக்கும் நிலுவையில் உள்ளது .

ஒரு முறை குண்டர் தடுப்பு காவலில் பாலாஜியை போலீசார் சிறைக்குள் வைத்தனர். இந்த கொலை வழக்குகளையும் வழிபறி வழக்கையும் வழக்கறிஞர் ஆசித்கான் தான் நடத்தி வந்துள்ளார்.
சிறையில் இருந்த ரவுடி பாலாஜியை ஜாமீனில் வெளியே எடுத்து விட்டுள்ளார். இந்த சூழலில் வழக்கறிஞர் வீட்டுக்கு வந்த ரவுடி பாலாஜி, வழக்கறிஞரிடம் தகராறில் ஈடுபட்டு வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதற்காக வழக்கறிஞரை ரவுடி பாலாஜி வெட்டினார், என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவான ரவுடி பாலாஜியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். ஜாமீனில் வெளியே எடுத்து விட்ட வழக்கறிஞரை பிரபல ரவுடி வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Video thumbnail
"வேளச்சேரி - செயின்ட் தாமஸ் மவுன்ட் விரைவு ரயில் சேவை" - எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன்
01:22
Video thumbnail
மிகவும் மென்மையான மனிதர்… நடனம் ஆடுவதில் விஜய் சிறந்தவர் -நடிகை தமன்னா
00:30
Video thumbnail
"அஜித் சார், மிகவும் நல்ல மனிதர் மென்மையானவர்" -நடிகை தமன்னா
01:00
Video thumbnail
"ரீல்ஸ் நல்லா போடுறீங்க.. அதேபோல படிப்பிலும் கவனம் செலுத்துங்கள்.." முதல்வர் அட்வைஸ்
00:38
Video thumbnail
இன்ஸ்டாவில் கலக்கும் சிறுவர்கள் தேவா, ஜீவா உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
02:12
Video thumbnail
"MGR-குறித்த வார்த்தைகளுக்கு என்னை மன்னித்து கொள்ளுங்கள்.." - தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்
01:41
Video thumbnail
சசிகலாவின் புதிய கட்சியின் பெயர் அறிவிப்பு
02:15
Video thumbnail
ரஜினியின் ஆளுமையை கொச்சைப்படுத்தக் கூடாது -விசிக தலைவர் திருமாவளவன் பதில்
02:02
Video thumbnail
நடிகர் விஜய்க்கு மன வலிமை உள்ளதா? -மீசை ராஜேந்திரன்
01:58
Video thumbnail
"தவெக தலைவர் விஜய் குறித்த கேள்வி" -செய்தியாளர்களுக்கு பதில் அளிக்காமல் சென்ற நடிகை த்ரிஷா
00:35
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img