spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் – தாமதமாக இன்று மாலை செல்லும்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சென்னையில் இருந்து 172 பேருடன், டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், ஓடு பாதையில் ஓடும் போது திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது இதையடுத்து விமானி அவசரமாக விமானத்தை ஓடு பாதையில் நிறுத்தினார். விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து, எடுத்த துரித நடவடிக்கையால், விமானம் ஆபத்திலிருந்து தப்பியதோடு, 172 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

  சென்னையில் இருந்து இன்று காலை 10 மணிக்கு, டெல்லிக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், 164 பயணிகள், 8 விமான ஊழியர்கள், 172 பேருடன் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, ஓடுபாதையில் ஓடத் தொடங்கிய போது, விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். இந்த நிலையில் விமானம் வானில் பறப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்த விமானி, உடனடியாக விமானத்தை ஓடுபாதையிலேயே அவசரமாக நிறுத்தினார். அதோடு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தார்.

இதை அடுத்து ஓடுபாதையில் நிறுத்தப்பட்டிருந்த ஏர் இந்தியா விமானத்தை, இழுவை வண்டிகள் மூலமாக விமானம் நிற்க வேண்டிய இடத்திற்கு, இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அதோடு விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்துக்குள் ஏறி பழுதடைந்த இயந்திரங்களை சரிபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக முயற்சி செய்தும் விமானத்தை சரிபார்க்க முடியவில்லை. இதனால் விமானத்துக்குள் இருந்த பயணிகள், விமான ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் -  தாமதமாக இன்று மாலை செல்லும்.

இதை அடுத்து பயணிகள் 164 பேரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பயணிகளுக்கு உணவு போன்ற வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விமானம் பழுதுபார்க்கப்பட்டு இன்று மாலை 5 மணி அளவில் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய, 164 பயணிகள், சென்னை விமான நிலையத்தில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர்.

டொனால்ட் டிரம்ப் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வணங்கிய கிராம மக்கள்

இதற்கிடையே விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக் கோளாறை விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து, உடனடியாக எடுத்த நடவடிக்கை காரணமாக, விமானம் ஆபத்தில் இருந்து தப்பித்து, விமானத்திலிருந்து 164 பயணிகள் உட்பட 172 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விமானம் மீண்டும் 7 மணி நேரம் தாமதமாக, இன்று மாலை டெல்லிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

Video thumbnail
இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் உ*ரிழப்பு
00:46
Video thumbnail
முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் மு.வீரபாண்டி தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
01:21
Video thumbnail
தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணலை தொடங்கினார் முதலமைச்சர்
00:33
Video thumbnail
தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜர்
00:46
Video thumbnail
எந்த தொகுதியில் போட்டி? என்ற கேள்விக்கு தமிழ்நாடு பாஜக துணைத்தலைவர் குஷ்பு பதில்
00:44
Video thumbnail
தந்தையின் இறுதி சடங்கு செய்து விட்டு தேர்வு எழுத சென்ற மாணவன்
01:55
Video thumbnail
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
02:00
Video thumbnail
அன்று-இன்று காளியம்மாள் பேச்சு #ADMK #NTK #Kaliyammal #EPS #EdappadiPalaniswami
00:51
Video thumbnail
"வேளச்சேரி - செயின்ட் தாமஸ் மவுன்ட் விரைவு ரயில் சேவை" - எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன்
01:22
Video thumbnail
மிகவும் மென்மையான மனிதர்… நடனம் ஆடுவதில் விஜய் சிறந்தவர் -நடிகை தமன்னா
00:30
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img