செய்திகள்

ரெட் அலார்ட் , அறிவித்த 15,16 தேதிகளில் 3844 குழந்தைகள் பிறந்துள்ளது; அரசு சுகாதார மையம் சாதனை.

தமிழகத்தில் ரெட் அலர்ட் விடுத்து, கனமழை பெய்த 15, 16 ஆகிய தேதிகளில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 3844 கர்பினிகளுக்கு நல்ல முறையில் குழந்தை பிறந்துள்ளது என்று பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருமழை காரணமாக சென்னை உள்ளிட்ட புறநகர் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் “ரெட் அலர்ட்” அறிவிக்கப்பட்டது. மேலும் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதனால் கர்பினி தாய்மார்கள் பிரசவ தேதிக்கு முன்னரே மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருந்தது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பிரசவ தேதி நெருங்கிய 2388 கர்ப்பிணித் தாய்மார்கள் 15.10.2024 தேதியிலும், 3314 கர்ப்பிணித் தாய்மார்கள் 16.10.2024 அன்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பொது சுகாதாரத் துறையின் மூலமாக அனுமதிக்கப்பட்டனர்.15 மற்றும் 16 ஆகிய இரு தினங்களில் முன்கூட்டியே அனுமதிக்கப்பட்டிருந்த 3844 கர்பினி தாய்மார்களுக்கு பாதுகாப்பான முறையில் குழந்தை பிறந்துள்ளது.

தொடர்ந்து மழை காலமாக இருப்பதால் மழை நீர் தேங்கும் இடங்களில், போக்குவரத்து பாதிப்பாகும் இடங்களில் உள்ள கர்பினி தாய்மார்கள் பிரசவ தேதிக்கு முன்பே அனுமதிக்க வேண்டும் என்றும் கடைசி நேர காலதாமதத்தை தவிர்க்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருந்தது. அதன் அடிப்படையில் அனைத்து சுகாதார மையங்களிலும் நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

 

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி