கடந்த சில வருடங்களுக்கு முன்பாக மயோசிட்டிஸ் நோயினால் பாதிக்கப்பட்ட இவர் சில நாட்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அதன் பின்னர் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கிவிட்டார். அதன்படி நடிகை சமந்தா, மம்மூட்டியுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் அல வைகுந்தபுரமுலு , குண்டூர் காரம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் த்ரிவிக்ரம் நடிகை சமந்தா குறித்து பேசி உள்ளார்.
அதாவது நடிகை ஆலியா பட் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜிக்ரா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நேற்று (அக்டோபர் 8) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமந்தா, த்ரிவிக்ரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது ஆலியா பட், திரையில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் சமந்தா ஒரு ஹீரோ என்றும் சமந்தாவும் நானும் த்ரிவிக்ரம் படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குனர் திரிவிக்ரம், “ரஜினிகாந்துக்கு பிறகு சமந்தா தான் அனைத்து மொழிகளிலும் பரவலான புகழைப் பெற்றுள்ளார்” என்றார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…