spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

கணவன் மனைவி கூட்டு சேர்ந்து நண்பனிடம் மோசடி.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

யாரை நம்புவது என்றே தெரியவில்லை; கணவன் மனைவி கூட்டு சேர்ந்து நண்பனிடம் மோசடி.ஆவடி: கோவை, விளாங்குறிச்சியை அடுத்த சேரன்மா நகரைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் , சென்னை ஆவடியை அடுத்த காவல்சேரி பகுதியில் அட்டை கம்பெனி ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதனை தனது நண்பரிடம் பார்த்துக் கொள்ளுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது நண்பனும் அவரது மனைவியும் இணைந்து போலி ஆவணம் தயாரித்து அந்த நிறுவனத்தை அபகரித்துள்ளார். இந்த புகாரில் தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூரில் விளாங்குறிச்சியை அடுத்த சேரன்மா நகரில் தனிஷ் சேவியர் ஆனந்தன் வசித்து வருபவர் . இவருக்கு 54 வயதாகிறது. ஆனந்தனுக்கு திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த காவல்சேரி பகுதியில் அட்டை கம்பெனி ஒன்றை ஆரம்பிக்க விரும்பினார். அவர் கோவையில் வசிக்கும் நிலையில், தனது நண்பரான சென்னை நொளம்பூர் பகுதியை சேர்ந்த முத்துராஜ் என்பவரிடம் தனது பெயரில் கம்பெனியை ஆரம்பித்து பார்த்துக் கொள்ளுமாறுக்கூறி கடந்த 2021-ம் ஆண்டு ஒப்பந்தம் ஏதுமின்றி ஒப்படைத்திருக்கிறார்.

இந்நிலையில் முத்துராஜ் தனது மனைவி முத்துலட்சுமி பெயரில் அந்த கம்பெனியை மாற்றியிருக்கிறார். பின்னர் அவரது நண்பர் கார்த்திக் என்பவருடன் சேர்ந்து கொண்டு போலி ஆவணங்களை உருவாக்கி கோயம்பேடு வங்கி கிளையில் கடனும், திருவள்ளூரில் அரசு மானியமும் பெற்றுள்ளனர்.

இதையடுத்து முத்துராஜ் அவரது மனைவி மற்றும் கார்த்திக் ஆகிய மூவரும் சேர்ந்து தனது கம்பெனியை அவர்களுக்கு எழுதி கொடுத்தது போல் போலியான ஆவணம் தயாரித்து வங்கியில் கடன் பெற்று ரூ.4 கோடி மோசடியில் ஈடுபட்டது தனிஷ் சேவியர் ஆனந்தனுக்கு விசாரித்த போது தெரியவந்தது.

தன்னை ஏமாற்றிய நண்பன் அவரது மனைவி மற்றும் அவருக்கு உதவியவர் உட்பட 3 பேர் மீதும் ஆனந்தன், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரையடுத்து, இன்ஸ்பெக்டர் ஆல்பின் பிரிஜிட் மேரி தலைமையிலான போலீசார், வழக்குப்பதிவு செய்து சென்னை கீழ்ப்பாக்கம் பேங்க் தெருவை சேர்ந்த முத்துராஜ் (46), அவரது மனைவி முத்துலட்சுமி (40) மற்றும் கார்த்திக் (39) ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Video thumbnail
பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தில் ரூ.2,500 உயர்த்தி மாதம் ரூ.15,000 வழங்கப்படும் -அன்பில் மகேஸ்
02:03
Video thumbnail
பொங்கலுக்கு எவ்வளவு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன? - அமைச்சரின் பதில்கள்
02:09
Video thumbnail
இதுக்கு மேல என்ன ஒரு மாற்றம் கொண்டு வரணும்.
01:54
Video thumbnail
குடும்பத்துடன் சங்கராந்தி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
01:00
Video thumbnail
ஜனநாயகன் சென்சார் போர்டு விவகாரம் | அதிமுக - பாஜக கூட்டணியில் விஜயை இணைக்க நெருக்கடி | Vijay | CBFC
07:58
Video thumbnail
புதுச்சேரியிலிருந்து பொள்ளாச்சி சென்ற பேருந்தில் தீவிபத்து
01:07
Video thumbnail
ஊக்கமும், உழைப்பும் இருந்தால் எந்த உயரத்துக்கும் செல்லலாம் -ஆட்சியர் சுப்புலட்சுமி பேச்சு..
02:06
Video thumbnail
பராசக்தி படம் எப்படி இருக்கு? இந்தி திணிப்பில் திமுகவின் பங்களிப்பு | Parasakthi | Sivakarthikeyan
08:41
Video thumbnail
பராசக்தி ரிலீஸ்.. பட்டாசு வெடித்து ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்.. களைகட்டிய திரையரங்கம்
01:43
Video thumbnail
பராசக்தி படம் பார்க்க வந்த நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி
00:54
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img