இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசாரின் அதிரடி நடவடிக்கையினால் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயம் இல்லாத சூழல் இருந்து வருகிறது.
தற்போது சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் கிராமம் குன்னுமேட்டு பகுதியை சேர்ந்த சாராயவியாபரி ராஜேந்திரன் என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக சங்கராபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து சங்கராபுரம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அதிரடியாக அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மணியாற்று பகுதியில் உள்ள விவசாய நிலத்தில், கேஸ் சிலிண்டர் அடுப்பை பயன்படுத்தி கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டிருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் ராஜேந்திரனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அவரிடமிருந்து சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கேஸ் சிலிண்டர் மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலிசார் பறிமுதல் செய்தனர்.
ஏற்கனவே அந்த கிராமத்தில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்ட சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…