spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சங்கராபுரம் அருகே மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர் கைது.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

சங்கராபுரம் அருகே மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர் கைது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு 72 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் சங்கராபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சேஷசமுத்திரம் கிராமத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசாரின் அதிரடி நடவடிக்கையினால் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயம் இல்லாத சூழல் இருந்து வருகிறது.

தற்போது சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் கிராமம் குன்னுமேட்டு பகுதியை சேர்ந்த சாராயவியாபரி ராஜேந்திரன் என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக சங்கராபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

ஜாமினில் எடுத்த வக்கீலை வீடு புகுந்து சரமாரியாக வெட்டிய ரவுடி தடுக்க வந்த மனைவிக்கும் வெட்டு.

இதனை அடுத்து சங்கராபுரம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அதிரடியாக அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மணியாற்று பகுதியில் உள்ள விவசாய நிலத்தில், கேஸ் சிலிண்டர் அடுப்பை பயன்படுத்தி கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டிருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் ராஜேந்திரனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அவரிடமிருந்து சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கேஸ் சிலிண்டர் மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலிசார் பறிமுதல் செய்தனர்.
ஏற்கனவே அந்த கிராமத்தில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்ட சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

 

Video thumbnail
தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டமன்றம் தொடங்கியது; தேசிய கீதம் பாடக் கூடாது என்பது இல்லை;
01:18
Video thumbnail
சட்டமன்றத்திற்கு ஆளுநர் அர்லேக்கர் வருகை.. பூங்கொத்து கொடுத்து சபாநாயகர் JCD பிரபாகர் வரவேற்பு
01:59
Video thumbnail
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2026.. காவலர்களின் மரியாதையை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் JCD பிரபாகர்
00:32
Video thumbnail
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2026.. முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திற்கு வருகை!
00:51
Video thumbnail
தூத்துக்குடியில் கப்பல் கட்டுமான திட்டம்: ரூ.38,000 கோடி முதலீடு, 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு
00:20
Video thumbnail
தலைமைச் செயலகம் செல்லும் வழியில் திரண்டிருந்த மக்களை சந்தித்த முதலமைச்சர் விஜய்
00:36
Video thumbnail
தயவுசெய்து உங்கள் ஆட்சியை பற்றி வரக்கூடிய செய்திகளை படியுங்கள்..- விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
02:17
Video thumbnail
"என்னை மன்னித்துவிடுங்கள்!" - சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் கொடுத்த மாஸ்டர் மகேந்திரன்!
02:49
Video thumbnail
"இயக்கத்திற்கு 50 லட்சம் மக்கள் எப்போது வருகிறார்களோ அன்று நாம் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும்..
02:14
Video thumbnail
சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக பேசும் தவெகவினர்..
01:48
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img