spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சங்கராபுரம் அருகே மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர் கைது.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

சங்கராபுரம் அருகே மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர் கைது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு 72 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் சங்கராபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சேஷசமுத்திரம் கிராமத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசாரின் அதிரடி நடவடிக்கையினால் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயம் இல்லாத சூழல் இருந்து வருகிறது.

தற்போது சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் கிராமம் குன்னுமேட்டு பகுதியை சேர்ந்த சாராயவியாபரி ராஜேந்திரன் என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக சங்கராபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

ஜாமினில் எடுத்த வக்கீலை வீடு புகுந்து சரமாரியாக வெட்டிய ரவுடி தடுக்க வந்த மனைவிக்கும் வெட்டு.

இதனை அடுத்து சங்கராபுரம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அதிரடியாக அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மணியாற்று பகுதியில் உள்ள விவசாய நிலத்தில், கேஸ் சிலிண்டர் அடுப்பை பயன்படுத்தி கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டிருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் ராஜேந்திரனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அவரிடமிருந்து சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கேஸ் சிலிண்டர் மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலிசார் பறிமுதல் செய்தனர்.
ஏற்கனவே அந்த கிராமத்தில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்ட சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

 

Video thumbnail
இசுலாமியர்களுக்கு துரோகம் போல, கிறித்துவர்களுக்கும் செய்ய தயாராகிவிட்டாரா பழனிசாமி? MKStalin
02:11
Video thumbnail
திருவொற்றியூரில் வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக MLA கே.பி.சங்கர்
01:26
Video thumbnail
உழவர்கரையில் மட்டும் விசிக போட்டி - விசிக தலைவர் திருமாவளவன்
02:46
Video thumbnail
"விஜயகாந்த்க்கு படம் நடித்து ஓட்டு கேட்டேன்… இப்போது மகனுக்காக நேரடியாக கேட்கிறேன்" DMK MKStalin
01:22
Video thumbnail
மோடிக்கு OPEN CHALLENGE.. -சங்கரன்கோவில் பரப்புரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு..
01:56
Video thumbnail
பிரச்சாரத்தின் போது குழந்தைக்கு "அகில்யாழன்" என்று பெயர் சூட்டிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
00:30
Video thumbnail
மதுரை மத்தி தொகுதியில் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் நடிகர் சுந்தர்.சி வேட்புமனு தாக்கல் செய்தார்
00:58
Video thumbnail
தேர்தல் நெருங்கிக்கிட்டு இருக்கு.. மக்களுக்கு என்ன சொல்றீங்க..? ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்ஷன்
00:46
Video thumbnail
தவெக மக்கள் பக்கம் நிற்கிறோம்; மக்கள் தவெக பக்கம் நிக்கிறாங்க - புதுச்சேரியில் விஜய் பேச்சு
14:36
Video thumbnail
விஜய்க்கு வேல் கொடுத்து வரவேற்ற தொண்டர்கள் #Puducherry #TVKVijay #TVK #Vijay
00:48
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img