ஆவடியில் சித்த மருத்துவ தம்பதியர் கழுத்தை அறுத்துக் கொலை

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஆவடியில் சித்த மருத்துவ தம்பதியர் கழுத்தை அறுத்துக் கொலை

ஆவடி அருகே சித்த மருத்துவ தம்பதியர் இருவர் கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தொடர் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவதால், ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

ஆவடியில் சித்த மருத்துவ தம்பதியர் கழுத்தை அறுத்துக் கொலை

சென்னை ஆவடி அருகே மிட்டனமில்லி காந்திநகர் 2வது தெருவை சேர்ந்தவர்கள் சித்த மருத்துவர் சிவன் நாயர் (62), ஓய்வு பெற்ற மத்திய அரசு பள்ளி ஆசிரியர் பிரசன்னகுமாரி (55) தம்பதியர். இவர்களது மகள் வெளிநாட்டில் பயின்று வரும் நிலையில், சித்த மருத்துவர் சிவன் நாயர் தனது வீட்டிலேயே பொது மக்களுக்கு சித்தவைத்திய முறையில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு மருத்துவம் பார்க்க வேண்டும் எனக் கூறி அவரது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிவன் நாயரை சரமாரியாக தாக்கி விட்டு அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். மேலும் அதனை தடுக்கமுயன்ற அவரது மனைவி பிரசன்ன குமாரியையும் மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த முத்தாப்புதுப்பேட்டை போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு ஆவடி காவல் ஆணையரக துணை ஆணையர்கள் நேரில் வந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.mugavari.in/news/tamilnadu-news/vaiko-statement-2/2226

இந்த இரட்டை கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவுவதால் அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது வட மாநில வாலிபர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்ற நிலையில் வீட்டிலிருந்த நகை பணங்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் சம்பவ இடத்திற்கு டாபி என்கிற மோப்ப நாயும், தடயவியல் நிபுணர்களும் நேரில் வந்து தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். சினிமா கதையை மிஞ்சும் வகையில் இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆவடி காவல் ஆணையரகத்தில் தொடர் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே வசிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். போலீசார் சரிவர ரோந்து செய்யாததே இது போன்ற சம்பவங்களுக்கு காரணமாக அமைவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

கொலை நடந்த இடத்தில் செல்போன் ஒன்று கிடைத்துள்ளது. அது குற்றவாளியின் செல்போனாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். அந்த கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Video thumbnail
பிஜேபி கூட்டணியால் திமுகவை வெற்றி பெற முடியுமா?
01:16
Video thumbnail
புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை?
00:50
Video thumbnail
திமுகவை குறிவைக்கும் அமலாக்கத்துறை
01:29
Video thumbnail
2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் திட்டம்
00:44
Video thumbnail
SIR திருத்தம், இந்த மண்ணின் பூர்வ குடி மக்களின் குடியுரிமைகளை பறிக்கும் முயற்சி
01:14
Video thumbnail
SIR திருத்தம் இந்த மண்ணின் பூர்வ குடி மக்களின் குடியுரிமைகளை பறிக்கும் முயற்சி | வேல்முருகன் பேட்டி
06:46
Video thumbnail
இரண்டாவது இடதுக்கு தான், அதிமுக - தவெக இடையே போட்டி
01:14
Video thumbnail
இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழும் கட்சி திமுக
01:14
Video thumbnail
விஜயுடன் இணையும் அண்ணாமலை, TTV, OPS, செங்கோட்டையன்
01:07
Video thumbnail
2026 தமிழ்நாடு தேர்தல் மிக மிக முக்கியமானது | விஜயுடன் இணையும் அண்ணாமலை, TTV, OPS, செங்கோட்டையன்
16:39
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img