spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ஜாமினில் எடுத்த வக்கீலை வீடு புகுந்து சரமாரியாக வெட்டிய ரவுடி தடுக்க வந்த மனைவிக்கும் வெட்டு.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஜாமினில் எடுத்த வக்கீலை வீடு புகுந்து சரமாரியாக வெட்டிய ரவுடி தடுக்க வந்த மனைவிக்கும் வெட்டு. வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடி, ஜாமினில் வெளியே எடுத்து விட்ட வழக்கறிஞரையும் அவரது மனைவியையும் வீடு தேடி சென்று சரமாரியாக வெட்டிய சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாநகர் சின்னத்திருப்பதி, புதிய குருக்கள் காலனியை சேர்ந்தவர். ஆஷித்கான் (30) இவர் சேலம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவரும் ,இவரது மனைவி பத்மப்பிரியா ஆகிய இருவரும் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்தனர். அப்போது அவரது கட்சிக்காரரான பிரபல ரவுடியான செவ்வாய்பேட்டையை சேர்ந்த ஜோசப் என்கிற பாலாஜி(24) வக்கீல் வீட்டிற்கு வந்துள்ளார்.

பின்னர் வழக்கறிஞர் ஆசித்கானிடம் பேசிக் கொண்டிருந்துள்ளார் . சிறிது நேரத்தில் வழக்கறிஞர் ஆசித்கானுக்கும், ரவுடி பாலாஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென வழக்கறிஞரை , ரவுடி பாலஜி தாக்கியுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த வக்கீல் மனைவி பத்மபிரியா தடுக்க வந்துள்ளார்.

அமோக விற்பனை – ஆன்லைனில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம்.

அவருக்கும் கையில் வெட்டி விழுந்துள்ளது. இதனால் அவர்கள் கூச்சலிட்டுள்ளனர். இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் தடுக்க ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதைக் கண்ட ரவுடி பாலாஜி திடீரென தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தார். பின்னர் வழக்கறிஞரையும் அவரது மனைவியையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கன்னங்குறிச்சி போலீசார் சம்பவம் இடம் சென்று விசாரணை நடத்தினர்.

வழக்கறிஞர் ஆஷித்கான் மற்றும் அவருடைய மனைவி ஆகியோரை வெட்டி விட்டு தப்பிய ரவுடி பாலாஜி மீது நான்கு பிரிவில் வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர். ரவுடி பாலாஜி மீது ஏற்கனவே தர்மபுரியில் இரட்டை கொலை வழக்கும், சேலம் ஆட்டையாம்பட்டியில் ஒரு கொலை வழக்கும், செவ்வாய்பேட்டை போலீசில் வழிபறி வழக்கும் நிலுவையில் உள்ளது .

ஒரு முறை குண்டர் தடுப்பு காவலில் பாலாஜியை போலீசார் சிறைக்குள் வைத்தனர். இந்த கொலை வழக்குகளையும் வழிபறி வழக்கையும் வழக்கறிஞர் ஆசித்கான் தான் நடத்தி வந்துள்ளார்.
சிறையில் இருந்த ரவுடி பாலாஜியை ஜாமீனில் வெளியே எடுத்து விட்டுள்ளார். இந்த சூழலில் வழக்கறிஞர் வீட்டுக்கு வந்த ரவுடி பாலாஜி, வழக்கறிஞரிடம் தகராறில் ஈடுபட்டு வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதற்காக வழக்கறிஞரை ரவுடி பாலாஜி வெட்டினார், என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவான ரவுடி பாலாஜியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். ஜாமீனில் வெளியே எடுத்து விட்ட வழக்கறிஞரை பிரபல ரவுடி வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Video thumbnail
முதலமைச்சரை சந்தித்து அழைப்பிதழ் வழங்கிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை
00:35
Video thumbnail
மதுரை - கோரிப்பாளையத்தில் ரூ.213 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலம்..
01:01
Video thumbnail
மனைவியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்
00:25
Video thumbnail
கேரளாவில் பிரபல ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து.. தீயை அணைக்க போராடும் தீயணைப்பு வீரர்கள்
01:14
Video thumbnail
இத்தாலி - பிரான்ஸ் எல்லையில் உள்ள கோர்மயூர் ஸ்கை தங்கும் விடுதி அருகே கடும் பனிச்சரிவு
00:59
Video thumbnail
நாகரீக அரசியலில் நடை பயில கற்றுக் கொடுத்தவர் எங்கள் வெற்றித் தலைவர் (விஜய்)
00:49
Video thumbnail
சென்னை அசோக் பில்லர் அருகே பால் பாக்கெட்டுகளை ஏற்றி வந்த லாரியில் ஏசி வெடித்து விபத்து
01:12
Video thumbnail
கோவை ஈஷா மைய மகா சிவராத்திரி விழா.. பக்தி பரவசம் பொங்க மெய் மறந்து ஆனந்த நடனம் ஆடிய நடிகைகள்
01:01
Video thumbnail
திமுக மாநாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை!
01:00
Video thumbnail
'MY LORD' படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதை ஒட்டி படக்குழுவை அழைத்து பாராட்டிய நடிகர் சூர்யா
00:24
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img