spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ஆயுத பூஜைக்கு பொருட்கள் வாங்க கோயம்பேடு சந்தைக்கு அலைமோதும் மக்கள் கூட்டம்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஆயுத பூஜைக்கு பொருட்கள் வாங்க கோயம்பேடு சந்தைக்கு அலைமோதும் மக்கள் கூட்டம்.
கோயம்பேடு சந்தைக்கு ஆயுத பூஜை பொருட்கள் வாங்க படையெடுக்கும் மக்கள் மகிழ்ச்சியா? விரக்தியா?
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை கொண்டாடுவதற்கு பூஜைக்கு தேவையான பொருட்களை கோயம்பேடு சந்தையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

சென்னை கோயம்பேடு சந்தையில் பூஜைக்கு தேவையான பூ, பழங்கள், வாழை இலை, வாழை கன்று, வெண் பூசணி, தென்னை தோரணம், மஞ்சள் கிழங்கு, காய்கறிகள், பொரி, அவல், கடலை, தேங்காய் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி சென்றனர். மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் விலை குறைவாக இருக்கும் என்று பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கோயம்பேடுக்கு வந்து பூஜை பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

பூக்களை பொறுத்தவரை பண்டிகை காலம் என்பதால் வரத்து சற்று அதிகரித்துள்ளது. குறிப்பாக, 1 கிலோ மல்லி விலை 750-900 ரூபாய் வரையிலும், 1 கிலோ சாமந்தி பூ 150-240 ரூபாய் வரையிலும், 1 கிலோ சாக்லேட் ரோஜா 300-320 ரூபாய் வரையிலும், 1 கிலோ பன்னீர் ரோஸ் 150-180 ரூபாய் வரையிலும், 1 கிலோ முல்லைப்பூ 400-450 ரூபாய் வரையிலும், 1 கிலோ ஜாதிப்பூ 160-400 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. பூக்களின் விலையும் சற்று அதிகரித்துள்ளதால் மக்கள் விரக்தி அடைந்துள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

மனைவியை அடித்து கொலை ; அப்பாவி போல நாடகமாடிய கணவன் கைது.

இதே போல பழங்களை பொறுத்தவரை சாத்துகுடி கிலோ 60 ரூபாயில் இருந்து 70 வரைக்கும், ஆப்பிள் கிலோ 70 ரூபாயில் இருந்து 150 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. பைனப்பிள் கிலோ 67 ரூபாய்க்கும், திராட்சை கிலோ 35 ரூபாயில் இருந்து 40 க்கும், ஆரஞ்சு கிலோ 35 ரூபாயிலிருந்து 50 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மொத்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலும் சில பொருட்களின் விலை அதிகரித்திருப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். பூஜை பொருட்கள் வரத்து அதிகரித்து இருக்கக்கூடிய நிலையில் மழை பெய்து இருப்பதால் தாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை நடைபெறவில்லை என்றும் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

 

Video thumbnail
மரக்குச்சியில் தாங்கும் உயர் மின்னழுத்த கம்பி... நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
00:50
Video thumbnail
ஒரு மாத தவெக ஆட்சி நன்றாகவே உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி பேட்டி.
01:05
Video thumbnail
அம்பத்தூர் | நள்ளிரவிலும் தொடரும் மின்துண்டிப்பு... ஆத்திரமடைந்த மக்கள் சாலைமறியல் போராட்டம்!
00:58
Video thumbnail
ஆவடியில் பியூஸ் கட்டை திருட்டுத் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு
00:31
Video thumbnail
பழனி முருகன் கோயிலில் மனைவி ஆர்த்தியுடன் சென்று சாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்
01:23
Video thumbnail
பயணிகள் ஏறும் நகரும் படிக்கட்டுகள் மோதியதில் 3 ஏர் இந்தியா விமானங்கள் சேதம்
00:27
Video thumbnail
கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதலமைச்சர் விஜய்
00:32
Video thumbnail
தெற்கு பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..
00:47
Video thumbnail
விருத்தாச்சலத்தில் சட்டமன்ற அலுவலகம் திறப்பு.. வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா..
00:23
Video thumbnail
தவெக எம்.எல்.ஏ பல்லவியுடன் நடந்த பிரச்சனை என்ன? - சென்னை மேயர் பிரியா விளக்கம்..
01:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img