spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

தள்ளிப்போகும் இளையராஜாவின் பயோபிக் படப்பிடிப்பு – தனுஷ் தான் காரணமா?

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

இசைஞானி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இளையராஜா. 70 காலகட்டங்களில் இருந்து இன்று வரையிலும் இவருடைய தனித்துவமான இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இலர். அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் இளையராஜா.

இந்த நிலையில் தான் இவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்க திட்டமிடப்பட்டது. அதில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்க இயக்குனர் அருண் மாதேஸ்வரன் படத்தினை இயக்க இருக்கிறார். நீரவ் ஷா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க உள்ளார். இந்த படத்தினை கனெக்ட் மீடியா நிறுவனம் இளையராஜாவுடன் இணைந்து தயாரிக்கிறது.

இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அதன்படி படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதேசமயம் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்களும் இணையத்தில் தொடர்ந்து பரவி வருகின்றன. அதாவது இளையராஜாவின் பயோபிக் படமாக உருவாகும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதே சமயம் படம் தொடங்குவதற்கான வேலைகளும் ஆரம்பித்து விட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆனால் படப்பிடிப்பு தொடங்குவது குறித்து எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை.இந்நிலையில் ரசிகர்கள் பலருக்கும் இளையராஜாவின் பயோபிக் படம் மீண்டும் தள்ளிப்போகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் நடிகர் தனுஷ் குபேரா, இட்லி கடை, தேரே இஷ்க் மெய்ன் என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருவதோடு படம் இயக்குவதிலும் பிசியாக இருக்கிறார். எனவே இளையராஜாவின் பயோபிக் படம் தள்ளிப் போக வாய்ப்புகள் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தள்ளிப்போகும் இளையராஜாவின்  பயோபிக் படப்பிடிப்பு  - தனுஷ் தான் காரணமா?

Video thumbnail
மெக்சிகோ நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு
00:46
Video thumbnail
இந்தியாவின் மதவெறுப்பு பிரச்சாரம் | அமெரிக்கா கொடுக்கும் நெருக்கடி | India | America
13:23
Video thumbnail
சென்னை தலைமைச் செயலகத்தில் ஊழியர் கோரிக்கைகள் | அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
01:21
Video thumbnail
வைகோவின் சமத்துவ நடைபயணத்தினை துவக்கி வைக்க திருச்சி வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
00:58
Video thumbnail
கிறிஸ்தவர்கள் தாக்குதல் விவகாரம் | மௌனம் காக்கும் விஜய், சீமான்
01:20
Video thumbnail
இசைஞானி இளையராஜா பாட்டுப்பாடி ரசிகர்களுக்கு வாழ்த்து
00:35
Video thumbnail
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள்
00:24
Video thumbnail
ஆவடி பொதுமக்களுடன் சேர்ந்து, புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடிய போலீசார்
00:39
Video thumbnail
"அர்ஜுனன் பேர் பத்து என்னுடைய 300-வது படம். அனைவருக்கும் நன்றி”- நடிகர் யோகி பாபு
01:02
Video thumbnail
ஆவடி காவல் ஆணையரகத்தில், பிரேம் ஆனந்த் சின்ஹா புதிய ஆணையராகப் பொறுப்பேற்றார்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img