spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

செயலியில் ஐபிஎல் ஒளிபரப்பு – நடிகை தமன்னாவுக்கு சம்மன்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img
செயலியில் ஐபிஎல் ஒளிபரப்பு – நடிகை தமன்னாவுக்கு சம்மன்
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை சட்டவிரோதமாக ஒளிபரப்பு செய்ததாக பதியப்பட்ட வழக்கில் நடிகை தமன்னா நேரில் ஆஜராக மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
செயலியில் ஐபிஎல் ஒளிபரப்பு - நடிகை தமன்னாவுக்கு சம்மன்
சமீபத்தில் தனது படத்தில் ஒரு பாட்டுற்காவது ஆட வேண்டும் என தேடப்படும் நடிகைகளில் படங்களில் நடித்து தென்னந்திய சினிமாவில் பிரபலமான தமன்னா பாலிவுட் படங்களிலும் பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

அந்த வகையில் மெகா மோசடியில் சிக்கிய மகாதேவ் செயலி தொடர்புடைய மற்றொரு செயலியான ஃபேர் பிளே (fair play ) என்ற செயலி விளம்பரத்தில் பல பாலிவுட் பிரபலங்கள் நடித்துள்ளனர்.

செயலியில் ஐபிஎல் ஒளிபரப்பு - நடிகை தமன்னாவுக்கு சம்மன்அனுமதியின்றி ஐபிஎல் போட்டிகளை சட்டவிரோதமாக அந்த செயலி நேரலை ஒளிபரப்பு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சட்டவிரோதமாக நேரலை செய்ததால் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் பெற்ற தனியார் நிறுவனம் 100 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி கொடுத்த புகாரின் அடிப்படையில் மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த செயலில் விளம்பரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை ஜாக்லின் பெர்னாண்டஸ், பாடகர் பாட்ஷா ஆகியோரை தொடர்ந்து நடிகை தமன்னாவும் நடித்திருந்தார்.

ஃபேர் பிளே செயலியானது மகாதேவ் செயலியுடன் தொடர்புடைய நிறுவனம் என்பது விசாரணையில் தெரிய வந்தது. மகாதேவ் செயலி மட்டுமல்லாது தொடர்புடைய 8 செயலிகள் சட்டவிரோதமாக செயல்படுவதாகவும் சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரா மகாராஷ்டிரா ஆகிய காவல்துறையில் அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த செயலிகள் தொடர்பாக அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

செயலியில் ஐபிஎல் ஒளிபரப்பு - நடிகை தமன்னாவுக்கு சம்மன்

மும்பை தாதா தாவூத் இப்ராஹீம் மற்றும் பல அரசியல் பிரமுகர்களின் பணம் இந்த ஆப்பின் மூலம் சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாகவும் விசாரணை விஸ்வரூபம் எடுத்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் பாலிவுட் பிரபலங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் சஞ்சய் தத் மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் அந்த நாளில் தான் இந்தியாவில் இல்லை என்றும் அதற்கு பதிலாக தனது பதிலை பதிவு செய்ய மற்றொரு தேதியை ஒதுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

https://www.mugavari.in/news/india-news/mp-election/2010

இந்த நிலையில் நடிகை தமன்னா வரும் 29ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும் படி மகாராஷ்டிர சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த செயலியின் சட்ட விரோத பணப்பரிமாற்ற விவகாரத்தில் தொடர்புடைய நடிகர் நடிகைகளுக்கு பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதா என்ற அடிப்படையிலும் வேறு ஏதேனும் தொடர்பு உள்ளதா எனவும் விரிவான விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Video thumbnail
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு |திமுக தொகுதிப் பங்கீடு முடிவு |தவெக என்ன செய்கிறது? DMK ADMK TVK
12:59
Video thumbnail
தி.மு.க - வி.சி.க தொகுதி ஒப்பந்தம்
00:51
Video thumbnail
தேர்தல் களம் 2026 | திமுக கூட்டணி Vs அதிமுக கூட்டணி | DMK Vs ADMK | MK Stalin | Edappadi Palaniswami
07:51
Video thumbnail
"எடப்பாடி பழனிசாமி முதல்வராக வர வேண்டும் தமிழ்நாட்டு மக்கள் விரும்புகின்றனர்" - பியூஷ் கோயல்
01:37
Video thumbnail
"ரெண்டே பேருக்கு தான் போட்டியே ஒன்னு விஜய் இன்னொன்னு நான்" - பவர் ஸ்டார் சீனிவாசன்
00:58
Video thumbnail
"தொகுதி பங்கீடு குறித்து அமித் ஷாவிடன் பேசவில்லை " - டிடிவி தினகரன் பேட்டி
02:11
Video thumbnail
கோரிக்கை வைத்த குட்டி ரசிகை: நிறைவேற்றிய விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா தம்பதி
00:39
Video thumbnail
"சேகர்பாபுவிற்கு எல்லாம் பதில் கொடுக்க நேரமில்லை" -ஆதவ் அர்ஜுனா
01:51
Video thumbnail
TVK கட்சியின் விசில் சின்னம் அச்சிடப்பட்ட தண்ணீர் பாட்டில்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல்
00:58
Video thumbnail
மும்பையில் விஜய்யை ஆரவாரத்துடன் வரவேற்ற ரசிகர்கள்
00:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img