இந்தியா

செயலியில் ஐபிஎல் ஒளிபரப்பு – நடிகை தமன்னாவுக்கு சம்மன்

செயலியில் ஐபிஎல் ஒளிபரப்பு – நடிகை தமன்னாவுக்கு சம்மன்
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை சட்டவிரோதமாக ஒளிபரப்பு செய்ததாக பதியப்பட்ட வழக்கில் நடிகை தமன்னா நேரில் ஆஜராக மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

சமீபத்தில் தனது படத்தில் ஒரு பாட்டுற்காவது ஆட வேண்டும் என தேடப்படும் நடிகைகளில் படங்களில் நடித்து தென்னந்திய சினிமாவில் பிரபலமான தமன்னா பாலிவுட் படங்களிலும் பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

அந்த வகையில் மெகா மோசடியில் சிக்கிய மகாதேவ் செயலி தொடர்புடைய மற்றொரு செயலியான ஃபேர் பிளே (fair play ) என்ற செயலி விளம்பரத்தில் பல பாலிவுட் பிரபலங்கள் நடித்துள்ளனர்.

அனுமதியின்றி ஐபிஎல் போட்டிகளை சட்டவிரோதமாக அந்த செயலி நேரலை ஒளிபரப்பு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சட்டவிரோதமாக நேரலை செய்ததால் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் பெற்ற தனியார் நிறுவனம் 100 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி கொடுத்த புகாரின் அடிப்படையில் மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த செயலில் விளம்பரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை ஜாக்லின் பெர்னாண்டஸ், பாடகர் பாட்ஷா ஆகியோரை தொடர்ந்து நடிகை தமன்னாவும் நடித்திருந்தார்.

ஃபேர் பிளே செயலியானது மகாதேவ் செயலியுடன் தொடர்புடைய நிறுவனம் என்பது விசாரணையில் தெரிய வந்தது. மகாதேவ் செயலி மட்டுமல்லாது தொடர்புடைய 8 செயலிகள் சட்டவிரோதமாக செயல்படுவதாகவும் சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரா மகாராஷ்டிரா ஆகிய காவல்துறையில் அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த செயலிகள் தொடர்பாக அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

மும்பை தாதா தாவூத் இப்ராஹீம் மற்றும் பல அரசியல் பிரமுகர்களின் பணம் இந்த ஆப்பின் மூலம் சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாகவும் விசாரணை விஸ்வரூபம் எடுத்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் பாலிவுட் பிரபலங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் சஞ்சய் தத் மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் அந்த நாளில் தான் இந்தியாவில் இல்லை என்றும் அதற்கு பதிலாக தனது பதிலை பதிவு செய்ய மற்றொரு தேதியை ஒதுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

https://www.mugavari.in/news/india-news/mp-election/2010

இந்த நிலையில் நடிகை தமன்னா வரும் 29ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும் படி மகாராஷ்டிர சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த செயலியின் சட்ட விரோத பணப்பரிமாற்ற விவகாரத்தில் தொடர்புடைய நடிகர் நடிகைகளுக்கு பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதா என்ற அடிப்படையிலும் வேறு ஏதேனும் தொடர்பு உள்ளதா எனவும் விரிவான விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி