spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மோடி அரசு மீது ஆஸி. பெண் பத்திரிக்கையாளர் பரபரப்பு புகார்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மோடி அரசு மீது ஆஸி. பெண் பத்திரிக்கையாளர் பரபரப்பு புகார்

இந்தியாவில் தேர்தல் செய்திகளை சேகரிக்க விடாமல் நாட்டை விட்டு வெளியேற தான் கட்டாயப்படுத்தப்பட்டதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் செய்தியாளர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மோடி அரசு மீது ஆஸி. பெண் பத்திரிக்கையாளர் பரபரப்பு புகார்

ஏபிசி எனப்படும் ஆஸ்திரேலியா செய்தி ஒளிபரப்பு கழகத்தை சேர்ந்த செய்தியாளர் அவனி டயஸ் கடந்த இரண்டரை ஆண்டுகளாக டெல்லியில் தங்கி பணியாற்றி வருகிறார்.

காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து அவனி டயஸ் சமீபத்தில் வெளியிட்ட செய்தி சர்ச்சையானது.

காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

இந்த செய்தி எல்லை மீறிய செயல் என்று கூறி அவனி டயஸின் விசாவை வெளியுறவுத்துறை அமைச்சகம் ரத்து செய்தது.

இதுகுறித்து தமது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவனி டயஸ் தான் இந்தியாவை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் குறித்த செய்திகளை சேகரிக்கவும் தமக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ள அவனி டயஸ் ஜனநாயகத்தின் தாய் என்று பிரதமர் மோடி அழைக்கும் மக்களவைத் தேர்தல் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக தாங்கள் இந்தியாவில் இருந்து வெளியேறியதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா அரசின் தலையிட்டால் மேலும் இரண்டு மாதம் வீசா நீட்டிக்கப்பட்டாலும் தமது விமான புறப்பட்ட பிறகே இந்திய அரசு வீசா நீட்டிப்புக்கு ஒப்புதல் அளித்ததாக அவனி டயஸ் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இதனிடையே இந்தியாவில் நடக்கும் தேர்தல் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை மேற்குலக மீடியாக்கள் வெளியிடுவதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

https://www.mugavari.in/news/tamilnadu-news/ipl-ticket-sale-arrest/1814

ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இந்த தேர்தலில் மேற்குலக மீடியாக்கள் தங்களையும் ஒரு அரசியல் போட்டியாளர் போல கருதிக் கொண்டு செய்திகளை வெளியிடுவதாக கூறி சாடினார். தேர்தல் நேரத்தில் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் வைத்துள்ள குற்றச்சாட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Video thumbnail
ஷீரடி சாய்பாபா கோவிலில் தவெக தலைவர் விஜய்
01:04
Video thumbnail
விஜய் வரவால் எந்த கட்சிக்கு அதிக பாதிப்பு? திமுகவிற்கா? அதிமுகவிற்கா?
01:52
Video thumbnail
ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு செல்ல நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்டார் விஜய்
00:40
Video thumbnail
திமுக, அதிமுக, தவெக அமைச்சரவை பட்டியல் தயார்… யார் ஆட்சி அமைப்பார்கள்?
01:18
Video thumbnail
விஜய்க்கு எத்தனை சதவீதம் வாக்குகள் கிடைக்கும்? எவ்வளவு சீட் பெறுவார்?
01:57
Video thumbnail
2026 தேர்தலில் 85 சதவீதம் வாக்கு பதிவு?
01:53
Video thumbnail
2026 தேர்தலில் 85% வாக்குப்பதிவு? | விஜய் வரவு யாருக்கு பாதிப்பு? | திமுகவிற்கா? அதிமுகவிற்கா? | DMK
19:30
Video thumbnail
கொடைக்கானலில் Cycling செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
01:45
Video thumbnail
திருச்செந்தூர் முருகன் கோயிலில் தவெக தலைவர் விஜய் வழிபாடு
01:48
Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வழிபாடு
02:04
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img