spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மோடி அரசு மீது ஆஸி. பெண் பத்திரிக்கையாளர் பரபரப்பு புகார்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மோடி அரசு மீது ஆஸி. பெண் பத்திரிக்கையாளர் பரபரப்பு புகார்

இந்தியாவில் தேர்தல் செய்திகளை சேகரிக்க விடாமல் நாட்டை விட்டு வெளியேற தான் கட்டாயப்படுத்தப்பட்டதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் செய்தியாளர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மோடி அரசு மீது ஆஸி. பெண் பத்திரிக்கையாளர் பரபரப்பு புகார்

ஏபிசி எனப்படும் ஆஸ்திரேலியா செய்தி ஒளிபரப்பு கழகத்தை சேர்ந்த செய்தியாளர் அவனி டயஸ் கடந்த இரண்டரை ஆண்டுகளாக டெல்லியில் தங்கி பணியாற்றி வருகிறார்.

காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து அவனி டயஸ் சமீபத்தில் வெளியிட்ட செய்தி சர்ச்சையானது.

காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

இந்த செய்தி எல்லை மீறிய செயல் என்று கூறி அவனி டயஸின் விசாவை வெளியுறவுத்துறை அமைச்சகம் ரத்து செய்தது.

இதுகுறித்து தமது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவனி டயஸ் தான் இந்தியாவை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் குறித்த செய்திகளை சேகரிக்கவும் தமக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ள அவனி டயஸ் ஜனநாயகத்தின் தாய் என்று பிரதமர் மோடி அழைக்கும் மக்களவைத் தேர்தல் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக தாங்கள் இந்தியாவில் இருந்து வெளியேறியதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா அரசின் தலையிட்டால் மேலும் இரண்டு மாதம் வீசா நீட்டிக்கப்பட்டாலும் தமது விமான புறப்பட்ட பிறகே இந்திய அரசு வீசா நீட்டிப்புக்கு ஒப்புதல் அளித்ததாக அவனி டயஸ் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இதனிடையே இந்தியாவில் நடக்கும் தேர்தல் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை மேற்குலக மீடியாக்கள் வெளியிடுவதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

https://www.mugavari.in/news/tamilnadu-news/ipl-ticket-sale-arrest/1814

ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இந்த தேர்தலில் மேற்குலக மீடியாக்கள் தங்களையும் ஒரு அரசியல் போட்டியாளர் போல கருதிக் கொண்டு செய்திகளை வெளியிடுவதாக கூறி சாடினார். தேர்தல் நேரத்தில் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் வைத்துள்ள குற்றச்சாட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் சாமி தரிசனம்
01:01
Video thumbnail
விஜய்யுடன் என்னை ஒப்பிடாதீர்கள்.. நான் அரசியலில் அனுபவம் பெற்றவன்.. - சரத்குமார்
01:25
Video thumbnail
பெரம்பலூர் அருகே மணல் சரிவு விபத்து – 50 வயது கூலி தொழிலாளி உயிரிழப்பு
00:50
Video thumbnail
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் விமானம் விபத்தில் காலமானார்
00:45
Video thumbnail
வாரத்தில் 5 நாட்கள் வேலை கோரி மத்திய அரசுக்கு எதிராக வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
01:55
Video thumbnail
ஏற்கனவே தோற்ற கூட்டணி | எத்தனை கெட்டப் போட்டு வந்தாலும் கெட் அவுட் தான்
01:43
Video thumbnail
இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் எங்கள் தமிழ்நாடு தான்
01:49
Video thumbnail
பாஜக - அதிமுக கட்டாயத்தால் உருவான கூட்டணி; மிரட்டலால், உருட்டலால் உருவான பிளாக்மெயில் கூட்டணி
01:35
Video thumbnail
தூய்மை பணியாளரை காரில் அழைத்துச் சென்ற தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ்
00:55
Video thumbnail
மதுரை நகர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்
01:08
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img