இயக்குனர் மணிரத்னம் கடைசியாக பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படத்தை இயக்கியிருந்த நிலையில் அதைத்தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில்தான் ரஜினி, மணிரத்னம் கூட்டணியில் புதிய படம் உருவாகப் போவதாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. அதாவது கடந்த 1991 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்மூட்டி, அரவிந்த்சாமி, ஷோபனா, ஸ்ரீ வித்யா உள்ளிட்டோர் நடித்து வெளியான படம்தான் தளபதி. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இன்றுவரையிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
எனவே 33 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரஜினி மற்றும் மணிரத்னம் கூட்டணி இணைய இருக்கும் தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தது. ஆனால் இது குறித்து பிரபல நடிகையும் இயக்குனர் மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினி தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “ரஜினி- மணிரத்னம் கூட்டணியிலான திட்டம் எதுவும் இல்லை. இது முற்றிலும் வதந்தி. இந்த தகவல் ரஜினிக்கும், மணிரத்னத்திற்கும் கூட தெரியாது” என்று கிண்டலடித்துள்ளார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…