ஐ.டி ஊழியர்களுக்கு WORK FROM HOME 15.10.2024- 18.10.2024 – மு.க. ஸ்டாலின் உத்தரவு.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஐ.டி ஊழியர்களுக்கு WORK FROM HOME 15.10.2024- 18.10.2024 – மு.க. ஸ்டாலின் உத்தரவு.சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (அக.14) தலைமைச் செயலகத்தில் வானிலை மைய எச்சரிக்கையைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

15.10.2024 முதல் 18.10.2024 வரை சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்ற வானிலை மைய எச்சரிக்கை அளித்துள்ளது.

முதலமைச்சர் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
அதில் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்த வேண்டும் என முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img