மாங்காடு  :  காதலனை பழிவாங்க  திருநங்கை எடுத்த விபரீத முடிவு.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

காதலனுக்கு உண்மையாக இருந்தேன் என்னை ஏமாற்றி விட்டான் இன்ஸ்டாகிராமில் உருக்கமான வீடியோ பதிவிட்டு திருநங்கை தூக்கில் தொங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொள்வதற்காக திருநங்கை லைவில் வீடியோ பதிவிட்ட போது பாய் சொல்லி அனுப்பிய இன்ஸ்டாகிராம் நண்பர்கள்.

மாங்காடு : காதலனை பழிவாங்க திருநங்கை எடுத்த விபரீத முடிவு.

மாங்காடு அடுத்த மவுலிவாக்கம், பஜனை கோயில் தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்தவர் இசை(என்ற) சரன்(24), திருநங்கையான இவர் கோடம்பாக்கத்தை சேர்ந்த கரன்(21), என்பவருடன் காதல் வயப்பட்டு கடந்த சில மாதங்களாக இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கரனுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்ததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருநங்கையான இசையை விட்டு பிரிந்து சென்று விட்டார்.இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த இசை நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில் மது போதையில் இருந்தபடி தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதனை கண்டதும் அவரது தோழிகள் மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு உள்பாக்கமாக சாத்தப்பட்டு இருந்தது இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மாங்காடு போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது திருநங்கையான இசை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தனது காதலன் கரன் தன்னை விட்டு பிரிந்து சென்ற ஏக்கத்தில் சமூகவலைதள பக்கத்தில் வீடியோவை பதிவிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது இது குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தவெக – மாநாட்டிற்கு இருசக்கர வாகனத்தில்  வரவேண்டாம்   – தொண்டா்களுக்கு விஜய் அறிவுறை.

திருநங்கை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வீடியோவில் காதலனுக்கு தான் உண்மையாக இருந்ததாகவும் ஆனால் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார் மேலும் நான் இறந்த பிறகு இறப்பிற்கு காரணமானவர்களை நண்பர்கள் யாரும் விடக்கூடாது என தெரிவித்துள்ளார். அதேபோல் மது அருந்தி கொண்டிருந்த திருநங்கை தான் கடைசி ரவுண்டு முடிந்தவுடன் அருகே உள்ள அறையில் தூக்கில் தொங்குவதாக இன்ஸ்டாகிராமில் லைவில் பேசி பதிவிட்டு இருந்தார் அப்போது கமெண்டில் வந்த இன்ஸ்டாகிராம் நண்பர்கள் சரக்கு என்ன பிராண்ட் என கேட்டதோடு கடைசியாக பாய் சொல்லி அனுப்பி வைத்தனர்..

Video thumbnail
தமிழகத்தில் பிஜேபி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் | BJP | ADMK | EPS | Modi
16:52
Video thumbnail
கரூர் துயர சம்பவம் தொடர்பான விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்
00:45
Video thumbnail
இந்தியாவில் ஏழைகளுக்கு முதன்முதலில் கல்வி அளித்தது கிறிஸ்தவ மிஷனரி
01:30
Video thumbnail
ரசிகர்களுக்கு கையசைத்தபடியே கோட் சூட்டில் ஸ்டைலாக வந்த விஜய்
00:34
Video thumbnail
Jananayagan Audio launch-க்கு cute ஆக வீடியோ வெளியிட்ட பூஜா
00:29
Video thumbnail
என்னையும், விஜயையும் பாஜக பெற்றெடுத்தபோது திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தார் -சீமான்
01:03
Video thumbnail
திருவண்ணாமலைக்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
02:50
Video thumbnail
மலேசியாவில் ஜனநாயகன் இசை வெளியீட்டிற்காக கூடிய கூட்டம்
00:24
Video thumbnail
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பிஜேபி வளர்வதற்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தான் காரணம் - திருமா எம்.பி
01:39
Video thumbnail
கலை கண்ணாடி அல்ல; சமூகத்தை மாற்றும் சம்மட்டி - -மார்கழியில் மக்களிசை விழாவில் எம்.பி கனிமொழி பேச்சு
01:19
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img