அக்.31 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழகம் முழுவதும் 16,500 சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டம் மிடபட்டுள்ளது. சிறப்புப் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக அக்.19 ஆம் தேதி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை நடத்திய பின்னர் அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
போக்குவரத்து துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வாதாக தெரிவிக்கின்றனர். 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து மட்டும் 10,500 சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டம் வகுக்கப்பட உள்ளது என கூறப்படுகிறது. 5.5 லட்சம் மக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய வாய்ப்பு இருப்பதால் அதற்கான பணிகளை திட்டமிட இருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்