சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடரும்; பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை- சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் தகவல்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடரும்; பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை- சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் தகவல்.சாம்சங் நிர்வாகம், சிஐடியு தொழிற்சங்கம் நிர்வாகிகளுக்கிடையே இடையே அமைச்சர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. போராட்டம் தொடரும் என்று சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த ஶ்ரீபெரும்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனம் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 36வது நாளாக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்த அமைச்சர்கள் குழுவை முதலமைச்சர் நியமனம் செய்திருந்தார்.ஏற்கனவே இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில் சாம்சங் விவகாரம் தொடர்பாக சி.ஐ.டி.யு மற்றும் ஊழியர்களிடம் அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

சென்னை தலைமை செயலகத்தில் பொதுப்பணித்துறையின் அமைச்சர் எ.வ. வேலு, தொழில்துறையின் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா,தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், சிறு குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் சிஐடியு மாநில தலைவர் சவுந்தராஜன்,மாநில செயலாளர் முத்துகுமார் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் ஊழியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

ஊழியர்களிடம் தனியாகவும், நிர்வாகத்திடம் தனியாகவும் 4 மணி நேரம் இந்த பேச்சு வார்த்தை நடைபெற்றது.
பேச்சு வார்த்தைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு மாநில தலைவர் சவுந்தராஜன்,
பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது, எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்த போராட்டம் தொடரும் எனபதை தெரிவித்தார்.

 

Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு.. விஜய் எப்போது அறிவித்தார்..
02:19
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தார் விஜய்க்கு ஆதரவா?
02:00
Video thumbnail
பாதிக்கப்பட்ட கரூர் மக்கள் சந்திப்பு.. விஜய் நடத்திய நாடகம்..
01:55
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி, CBI சாட்சியை கலைக்கும் விஜய்
01:06
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி விஜய் | CBI சாட்சியை கலைக்கும் விஜய் | க்ரைம் ரேட் கூடிக்கொண்டே போகிறது | TVK
20:20
Video thumbnail
பெரியாரையும், திராவிட சிந்தனையாளர்களையும் தூக்கிப் பிடித்து தொடங்கப்பட்ட கட்சி நாம் தமிழர் கட்சி
01:09
Video thumbnail
அதிமுக கட்சி உடைவதற்கு பாஜக தான் காரணம்
01:12
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக
01:18
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக | திமுக கூட்டணி 180- 200 தொகுதிகள் வெற்றி
12:14
Video thumbnail
திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி - The Print
01:13
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img