spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

பாலத்தில் நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம் இல்லை என தாம்பரம் மாநகர காவல்துறை அறிவிப்பு.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பாலத்தில்  நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம் இல்லை என  தாம்பரம் மாநகர காவல்துறை அறிவிப்பு சென்னையில் கனமழை எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் பாலங்கள் மீது நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக எழுந்த புகாருக்கு, தாம்பரம் மாநகர காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்த நேற்று வேளச்சேரி மேம்பாலத்தில் ஏராளமானோர் தங்களது கார்களை நிறுத்தி வைத்தனர். இதேபோல் மேடவாக்கத்தில் உள்ள மேம்பாலத்திலும் ஏராளமானோர் தங்களது கார்களை நிறுத்தினர்.

இந்நிலையில், பாலத்தின் மீது போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தியதாக கூறி போக்குவரத்து துறையினர் அபாரதம் விதித்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் பொதுமக்கள் வாகனங்களை பாலத்தின் மீது நிறுத்த எவ்வித தடையும் இல்லை, அபராதம் வசூலிக்கபடாது என தாம்பரம் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- பாலங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதாக வதந்தி பரவி வருகிறது. அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். அத்தகைய வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. தாம்பரம் மாநகரில் உள்ள அனைத்து போக்குவரத்து காவலர்களுக்கும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில், வசதிக்காக தாம்பரம் நகர போலீசார் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சவாலான வானிலையின்போது வாகனங்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் நிறுத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில், அருகிலுள்ள வாகன நிறுத்துமிடங்களைக் கண்டறிய, குடிமக்களுக்கு எங்கள் காவல் கட்டுப்பாட்டு அறை உதவும். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதியே எங்களின் முதன்மையான முன்னுரிமைகள் மற்றும் தேவையான ஆதரவை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். பொதுமக்களுக்கு எதேனும் உதவி தேவைபட்டால் +9194981 81500 என்ற எண்ணை தொடர்பு கொள்ள தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் கேட்டுக் கொண்டுள்ளப்படுகின்றனர், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Video thumbnail
ஜாக்கி மூலம் பழமையான கோவில்கள் பாதுகாப்பாக உயர்த்தல்; இடிக்காமல் கோவிலை உயர்த்தும் நவீன ஜாக்கி முறை
00:59
Video thumbnail
வங்கதேசத்தின் தௌலத்தியா காட் பகுதியில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 23 பேர் உயிரிழந்தனர்
01:44
Video thumbnail
தேர்தல் களம் 2026; தவெக என்ன செய்கிறது? #vijay #tvk
01:15
Video thumbnail
தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடப் போவதில்லை என கமல் அறிவிப்பு
00:46
Video thumbnail
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..
00:45
Video thumbnail
எனர்ஜி தட்டுப்பாடு
01:25
Video thumbnail
எல்பிஜி புதிய முன்பதிவு விதிகளில் மாற்றம்
00:56
Video thumbnail
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு |திமுக தொகுதிப் பங்கீடு முடிவு |தவெக என்ன செய்கிறது? DMK ADMK TVK
12:59
Video thumbnail
தி.மு.க - வி.சி.க தொகுதி ஒப்பந்தம்
00:51
Video thumbnail
தேர்தல் களம் 2026 | திமுக கூட்டணி Vs அதிமுக கூட்டணி | DMK Vs ADMK | MK Stalin | Edappadi Palaniswami
07:51
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img