spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

பாலத்தில் நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம் இல்லை என தாம்பரம் மாநகர காவல்துறை அறிவிப்பு.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பாலத்தில்  நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம் இல்லை என  தாம்பரம் மாநகர காவல்துறை அறிவிப்பு சென்னையில் கனமழை எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் பாலங்கள் மீது நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக எழுந்த புகாருக்கு, தாம்பரம் மாநகர காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்த நேற்று வேளச்சேரி மேம்பாலத்தில் ஏராளமானோர் தங்களது கார்களை நிறுத்தி வைத்தனர். இதேபோல் மேடவாக்கத்தில் உள்ள மேம்பாலத்திலும் ஏராளமானோர் தங்களது கார்களை நிறுத்தினர்.

இந்நிலையில், பாலத்தின் மீது போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தியதாக கூறி போக்குவரத்து துறையினர் அபாரதம் விதித்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் பொதுமக்கள் வாகனங்களை பாலத்தின் மீது நிறுத்த எவ்வித தடையும் இல்லை, அபராதம் வசூலிக்கபடாது என தாம்பரம் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- பாலங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதாக வதந்தி பரவி வருகிறது. அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். அத்தகைய வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. தாம்பரம் மாநகரில் உள்ள அனைத்து போக்குவரத்து காவலர்களுக்கும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில், வசதிக்காக தாம்பரம் நகர போலீசார் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சவாலான வானிலையின்போது வாகனங்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் நிறுத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில், அருகிலுள்ள வாகன நிறுத்துமிடங்களைக் கண்டறிய, குடிமக்களுக்கு எங்கள் காவல் கட்டுப்பாட்டு அறை உதவும். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதியே எங்களின் முதன்மையான முன்னுரிமைகள் மற்றும் தேவையான ஆதரவை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். பொதுமக்களுக்கு எதேனும் உதவி தேவைபட்டால் +9194981 81500 என்ற எண்ணை தொடர்பு கொள்ள தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் கேட்டுக் கொண்டுள்ளப்படுகின்றனர், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம் #Tirupati #Samantha #RajNidimoru
00:55
Video thumbnail
என்னுடைய மகன் மிதுன் அரசியலுக்கு வர மாட்டார் - எடப்பாடி பழனிசாமி
01:12
Video thumbnail
தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டமன்றம் தொடங்கியது; தேசிய கீதம் பாடக் கூடாது என்பது இல்லை;
01:18
Video thumbnail
சட்டமன்றத்திற்கு ஆளுநர் அர்லேக்கர் வருகை.. பூங்கொத்து கொடுத்து சபாநாயகர் JCD பிரபாகர் வரவேற்பு
01:59
Video thumbnail
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2026.. காவலர்களின் மரியாதையை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் JCD பிரபாகர்
00:32
Video thumbnail
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2026.. முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திற்கு வருகை!
00:51
Video thumbnail
தூத்துக்குடியில் கப்பல் கட்டுமான திட்டம்: ரூ.38,000 கோடி முதலீடு, 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு
00:20
Video thumbnail
தலைமைச் செயலகம் செல்லும் வழியில் திரண்டிருந்த மக்களை சந்தித்த முதலமைச்சர் விஜய்
00:36
Video thumbnail
தயவுசெய்து உங்கள் ஆட்சியை பற்றி வரக்கூடிய செய்திகளை படியுங்கள்..- விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
02:17
Video thumbnail
"என்னை மன்னித்துவிடுங்கள்!" - சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் கொடுத்த மாஸ்டர் மகேந்திரன்!
02:49
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img