உலக ஆணழகன் கோப்பை வென்று திரும்பிய நாமக்கல் சரவணனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சரவணனுக்கு வருமான வரி துறை பணி கிடைத்துள்ளது. தமிழ் நாடு அரசு வேலை வாய்ப்புகள் வழங்கினால் இளைஞர்கள் ஆர்வத்துடன் வருவார்கள் என்று அமெச்சூர் ஆண்ழகன் சங்க சேர்மன் தகவல்.

உலக ஆணழகன் கோப்பை வென்று திரும்பிய நாமக்கல் சரவணனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

 

மாலத்தீவில் 15வது உலக ஆணழகன் போட்டி நடந்தது. இதில் இந்தியா, கஜகஸ்தான் உள்பட 36 நாடுகளில் இருந்து ஆணழகன்கள் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து 34 பேர் கலந்து கொண்டனர். 60 கிலோ எடை பிரிவில் சேலத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் 4வது இடத்தை கைப்பற்றினார். 80 கிலோ எடை பிரிவில் கன்னியாகுமரியை சேர்ந்த ஜிஜோ மரியோ வெள்ளி பதக்கமும் 90 கிலோ எடை பிரிவில் நாமக்கலை சேர்ந்த சரவணன் தங்க பதக்கமும் வென்று உள்ளனர். சாம்பியன் ஆப் சாம்பியன் போட்டியில் நாமக்கலை சேர்ந்த சரவணன் வென்று உலக ஆணழகன் பட்டத்தை 2வது முறையாக கைப்பற்றினார். உலக ஆணழகன் பட்டத்தை வென்ற சரவணன், பதக்கங்களை வென்ற வீரர்கள் மாலத்தீவில் இருந்து கொழும்பு வழியாக் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் தமிழ் நாடு அமெச்சூர் ஆணழகன் சங்க சேர்மன் அரசு மற்றும் நிர்வாகிகள் அவா்களை உற்சகமாக வரவேற்றனர். உலக ஆணழகன் கோப்பையை அமெச்சூர் சங்க நிர்வாகிகளிடம் தந்தனர்.

பின்னர் உலக ஆணழகன் பட்டத்தை வென்ற நாமக்கல் இளைஞர் சரவணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- எனக்கு உடலில் அடிப்பட்டு விட்டது. இதனால் உலக ஆணழகன் போட்டியில் பங்கேற்க விருப்பம் இல்லாமல் இருந்தேன். ஆனால் போட்டியில் பங்கேற்க வேண்டும் என ஊக்கம் அளித்தனா். எடை பிரிவிலும் சாம்பியன் ஆப் சாம்பியன் பிரிவிலும் தங்கம் வென்றேன். இந்த முறை போட்டி கடுமையாக இருந்தது. கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் வீரர்களுடன் மோதுவது மிகவும் கடினமாக இருந்தது என்றார்.

உலக ஆணழகன் கோப்பை வென்று திரும்பிய நாமக்கல் சரவணனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
தமிழ் நாடு அமெச்சூர் ஆணழகன் சங்க சேர்மன் அரசு கூறுகையில், மாலத்தீவில் நடந்த போட்டியில் தமிழ் நாடு வீரர்கள் வென்று உள்ளனர். இந்தியாவில் உலக ஆனழகன் போட்டியை 2வது முறையாக சரவணன் வென்று பெருமை சேர்த்து உள்ளார். தமிழ் நாடு அரசு பல்வேறு வகையில் ஊக்கம் அளித்து உள்ளது. தமிழ் நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இடஒதுக்கீட்டில் ஆணழகன் வீரர்களையும் இணைப்பதாக கூறி உள்ளது.

எல்லா விளையாட்டு போட்டிகளில் கஷ்டங்கள் உள்ளன. ஆனால் ஆணழகன் போட்டியில் அதிகமாக கஷ்டம் இருக்கும். உணவு பழக்கங்கள் கடைபிடிக்க வேண்டும். பொருளாதார உதவிகள் கிடைத்தால் தமிழ் நாட்டில் அதிகமானவர்கள் ஆண்ழகன் போட்டிகளில் பங்கேற்க முடியும். தமிழ் நாட்டை சேர்ந்த 2 பேர் உலக ஆண்ழகனாக இருப்பது பெருமை. அரசு உதவிகள் செய்தால் மாவட்டங்களில் உள்ளவர்களும் அதிக ஆர்வத்துடன் வருவார்கள். சரவணனுக்கு வருமான வரி துறையில் பணி கிடைத்து உள்ளது.

சென்னையில் பலூன் திருவிழா – தேதி விரைவில் அறிவிக்கப்படும்

தமிழ் நாடு அரசு, அரசாணை வெளியிட்டு உள்ளது. முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் பணியிடங்கள் கிடைக்க கூடிய வகையில் நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும். பஞ்சாப் உள்பட சில மாநிலங்களில் போலீஸ் உள்பட மாநில அரசு பணிகளில் சேர்க்கப்படுகின்றனர். அதுபோல் தமிழ் நாடு அரசும் செய்தால் இளைஞர்கள் ஆர்வத்துடன் வருவார்கள். இளைஞர்கள் தவறான பாதையில் செல்லாமல் இருக்க விளையாட்டு முக்கியமானது. இவ்வாறு அவர் கூறினார்.

Video thumbnail
யார் இந்த குருமூர்த்தி?
00:46
Video thumbnail
செங்கோட்டையன் அரசியல் வாழ்க்கை காலி
00:40
Video thumbnail
தமிழ்நாடு அரசியலை தீர்மானிக்கும் பவர் செக்டார்கள்..
00:56
Video thumbnail
யார் இவர்கள்? | நீதிமன்றத்தை மிரட்டும் தன்கர் | கவர்னரின் அடாவடி செயல்களை நியாயப்படுத்தும் பாஜகவினர்
10:43
Video thumbnail
தமிழ்நாடு அரசியலை தீர்மானிக்கும் பவர் செக்டார்கள்| காணாமல் போன அரசியல் தலைவர்கள்| குருமூர்த்தி யார்
13:55
Video thumbnail
மாநில சுயாட்சி என்பது எங்களின் உரிமை | ஸ்டாலின் எடுத்து வைத்த முதல் அடி | அலறும் ஒன்றிய அரசு
12:54
Video thumbnail
வட மாநிலங்களின் நிலைமை தமிழ்நாட்டில்... | Tamilnadu | DMK | BJP
00:32
Video thumbnail
2026 தேர்தலில் திமுகவை வீழ்த்துவதே இலக்கு - பாஜக | BJP | DMK
00:36
Video thumbnail
திமுகவை கண்டு மிரளும் பாஜக | DMK | MK Stalin | BJP | Modi
00:41
Video thumbnail
திமுகவை கண்டு மிரளும் பாஜக | திமுகவை தோற்கடிக்க முடியுமா? | DMK | MK Stalin | BJP | Modi | RSS
06:11
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img