spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

பாரதியின் அன்பு, மானுடத்தையும் தாண்டியது : நூல் அறிமுக விழாவில் – முன்னாள் நீதிபதி எஸ் விமலா

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லதில், “மகாகவி பாரதி களஞ்சியம்” என்னும் நூல் அறிமுக விழா மற்றும் முன்பதிவு தொடக்க விழா நடைபெற்றது, இதில், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ் விமலா, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அருள், திரைப்பட இயக்குனர் S.P.முத்துராமன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்விழாவில் சிறப்புரையாற்றிய சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ் விமலா, இந்திய அரசியலைமைப்பு சொல்லும் அடிப்படை உரிமைகள் பாரதியின் பாடல்களில் நிறந்துள்ளன என்றார். பாரதியின் அன்பு, மானுடத்தையும் தாண்டியது என்றும் பசியை ஒழிக்க பாரதி போராடினார் என்றும் அவர் தெரிவித்தார். பாரதியின் கருத்துகள் இப்பொழுது மட்டும் அல்ல, எப்பொழுதுக்கும் தேவைப்படும் என விமலா குறிப்பிட்டார்.பாரதியின் அன்பு, மானுடத்தையும் தாண்டியது : நூல் அறிமுக விழாவில் - முன்னாள் நீதிபதி எஸ் விமலா

‘பெண் விடுதலை என்றால் மண் விடுதலை’ என, பாரதி அந்த காலத்திலேயே சொன்னதால் மட்டுமே, உலகில் உள்ள பாதி பெண்களாவது வெளி உலகத்துக்கு வந்துள்ளனர் என அவர் கூறினார். “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்று பாரதியார் சொன்ன நிலையில், “மடமையைக் கொளுத்தாமல், மாதரையே கொளுத்துவதைத்தான் மகளிர் நீதிமன்றத்தில் பார்த்துக்கொண்டு இருப்பதாகவிமலா, வேதனையை வெளிப்படுத்தினார்.

இவ்விழாவில் வாழ்த்துறை வழங்கிய தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அருள், தமிழ்நாடு முதலமைச்சர், மகா கவியின் நினைவு நாளை (September 11) மகாகவி நாளாக அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டினார். பாரதியாரின் பணிகளை தொகுத்த அறிஞர்களின் குடும்பதினரை அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளதை அவர் எடுத்துரைத்தார்.பாரதியாரின் பணியை யார் செய்தாலும், பாரதியின் எந்த வரியை யார் தொட்டாலும் அவர்கள் வெற்றியே பெறுவார்கள் என அருள் தெரிவித்தார்.

முதலமைச்சரால், வரும் ஜனவரி மாதம் துவக்கி வைக்கப்படவுள்ள சென்னை புத்தகக் கண்காட்சியில், “மகாகவி பாரதி களஞ்சியம்” நூல் வெளியிடப்படுவதற்கு அருள், மகிழ்ச்சி தெரிவித்தார்.

நள்ளிரவில் ஆம்புலன்ஸ் பெண்ணுக்கு பிரசவம்.. தாய்-சேய் நலமுடன் மருத்துவமனையில் அனுமதி.

Video thumbnail
நீதிமன்ற வளாகத்தில் விவாகரத்து மனுவை கிழித்தெறிந்து, கணவருடன் சேர்த்த மனைவி
00:58
Video thumbnail
"தவெகவிற்கு ஆதரவளித்த கட்சிகள் மீது முதலமைச்சர் விஜய்-க்கு நம்பிக்கை இல்லையா?"
01:46
Video thumbnail
சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அக்கட்சியில் இணையும் மாற்றுக் கட்சியினர்
02:40
Video thumbnail
தவெகவின் ஒருமாத கால ஆட்சி குறித்து வைகோ சொன்ன கருத்து
01:18
Video thumbnail
தமிழக அரசின் பட்ஜெட் நல்ல விதமாக இருக்கும்... நிதி அமைச்சர் மரிய வில்சன் பேட்டி..
01:30
Video thumbnail
தவெகவில் இணைவதற்கு பனையூர் தவெக அலுவலகம் வந்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி
01:09
Video thumbnail
சென்னையில் இருந்து கோவை சென்ற அண்ணாமலைக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு..
00:57
Video thumbnail
சசிகுமார் அவரது படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன், பாரதிராஜா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்
00:38
Video thumbnail
கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்
00:50
Video thumbnail
டெல்லியில் இருந்து விமானம் மூலம் மங்களூரு சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய்
01:01
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img