spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு இ-பாஸ் முறை நீட்டிப்பு

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு இ-பாஸ் முறை நீட்டிப்பு நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு கடந்த மே 7ஆம் தேதி முதல் இபாஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறையை மறுஉத்தரவு வரும் வரை நீட்டிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இதனை அடுத்து, நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை மறுஉத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி ஆகியோர் வெளியிட்டுள்ள உத்தரவில், நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானலுக்கு பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு கடந்த மே 7ஆம் தேதி முதல் இபாஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உயர்நீதிமன்ற மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இ-பாஸ் நடைமுறை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மலேசியாவிலிருந்து விமானத்தில் கடத்திவந்த அரிய வகை ஆமைகள் பறிமுதல்.

பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பிற மாவட்ட வாகனங்கள் www.epass.tnega.org என்ற இணையதளத்தின் மூலம் இ-பாஸ் பெறலாம் என்றும் ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில் கொடைக்கானலில் இ-பாஸ் பெற விண்ணப்பிப்பது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்களுக்கு உள்ளூர் இ-பா ஸ் (Local ePass) பெறுவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களை 0451-2900233, 9442255737 என்ற எண்களில் தொடர்புகொண்டு பயன்பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Video thumbnail
விழுப்புரம்: அரசு பேருந்து நடத்துனர் மீது மது போதையில் தாக்குதல்
00:37
Video thumbnail
மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து கூட்டணியில் இணைந்தார் டிடிவி தினகரன்
00:57
Video thumbnail
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்
00:36
Video thumbnail
"ஆளுநரின் செயல் வருத்தமளிக்கிறது" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேச்சு
01:35
Video thumbnail
தவெக தலைவர் விஜய்யிடம் 5.30 மணி நேரமாக நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவு
00:48
Video thumbnail
ஆந்திரா: பெண் காவலர் ஜெயாவுக்கு குவியும் பாராட்டு
00:46
Video thumbnail
ஜான்சியில் சுங்கச்சாவடியில் நின்றிருந்த கார்களை வேகமாக வந்து முட்டித் தள்ளிய லாரி
00:31
Video thumbnail
மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
00:55
Video thumbnail
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜர்
00:30
Video thumbnail
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்
01:09
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img