spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மலேசியாவிலிருந்து விமானத்தில் கடத்திவந்த அரிய வகை ஆமைகள் பறிமுதல்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மலேசியாவிலிருந்து, சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட அரிய சிவப்பு காது நட்சத்திர ஆமைகளை கடத்திவந்த 2 நபர்களை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை வந்த விமானத்தில் வந்த பயணிகளை, சுங்க அதிகாரிகள் தீவிர பரிசோதனை கொண்டனர். அப்போது பெரிய பிளாஸ்டிக் கூடைகளுடன் வந்த சென்னையைச் சேர்ந்த 2 ஆண் பயணிகள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து, அவர்கள் இருவரையும் நிறுத்தி விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினர்.

இதனால், அவர்கள் வைத்திருந்த கூடைகளை பிரித்து சோதனையிட்டபோது, உள்ளே சிவப்பு காதுகளை கொண்ட நட்சத்திர ஆமைகள் ஏராளமாக இருந்தன. இதை அடுத்து இருவரையும் கைதுசெய்த சுங்க அதிகாரிகள், அவர்களிடம் இருந்த ஆமைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, சென்னை பெசன்ட் நகரில் உள்ள மத்திய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விமான நிலையத்திற்கு வந்த அதிகாரிகள, பறிமுதல் செய்யப்பட்ட சிவப்பு காது நட்சத்திர ஆமைகளை ஆய்வு செய்தனர். அதில் சுமார் 5 ஆயிரம் ஆமை குஞ்சுகள் உரிய ஆவணமின்றி சென்னைக்கு கடத்திவந்தது தெரியவந்தது.

 

சென்னையில் சற்றே குறைந்த தங்கம் விலை…சவரன் எவ்வளவு தெரியுமா?

இந்த சிவப்புக்காது நட்சத்திர ஆமைகளை இந்தியாவுக்குள் அனுமதித்தால், வெளி நாட்டு நோய்கள், இங்குள்ள விலங்குகள், பறவைகளுக்கு பரவும் அபாயம் உள்ளதால் அவற்றை இன்று அதிகாலை விமானம் மூலம் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பினர். மேலும் ஆமைகளை கடத்திய இருவரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Video thumbnail
புதுமைப்பெண் திட்டத்தால் பெண்களின் கல்லூரி சேர்க்கை 34% உயர்ந்துள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
01:32
Video thumbnail
ரசிகர்களைக் கண்டித்த அஜித்.. Please Behave Yourself...
00:20
Video thumbnail
விஜய், அவர் வந்தே ஆகணும்; மக்கள் நினைச்சா விஜய் கண்டிப்பா வந்துடுவார் - சிவகுமார்
01:20
Video thumbnail
கோட்டை முதல் குமரி வரை தேமுதிக யாருடன் கூட்டணி என்பதுதான் பேசுபொருள்.. தேமுதிக பிரேமலதா விஜயகாந்த்
01:21
Video thumbnail
ரீ-ரிலீஸ் ஆகும் மௌனம் பேசியதே | சூர்யா வெளியிட்ட வீடியோ
01:15
Video thumbnail
டாடா கார் தொழிற்சாலை - முதல்வர் திறந்துவைத்தார்
00:57
Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரீலீலா தனது தாயாருடன் சாமி தரிசனம் செய்தார்
00:58
Video thumbnail
முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
01:49
Video thumbnail
திமுக இளைஞரணி தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுத்த SelfieVideo
00:33
Video thumbnail
வால்பாறை அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த குட்டி யானை; நகராமல் அங்கேயே நின்ற தாய் யானை
01:19
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img