ஆவடி அருகே மாட்டு வண்டியில் சீர்வரிசை பொருட்களை எடுத்து வந்து அனைவரையும் திரும்பி பார்க்க செய்த தாய்மான்.
தமிழகத்தில் தாய்மாமன் சீர்வரிசை கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. உறவு முறைகளில் பெற்ற தாய்க்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதும் குறைவு இல்லாமல் தாய் கூட பிறந்த தாய் மாமனுக்கும் முக்கியத்துவம் தரப்படுவது வழக்கம்.
அந்த வகையில் சென்னை ஆவடி அருகே ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த கலைவாணன்- அபிராமி ஆகியோரின் மகள் ஹர்ஷிகாவின் பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது. அந்த பூப்புனித நீராட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டது. விழாவிற்கு வருபவர்களுக்கு பிரியாணி உள்ளிட்ட சிறப்பு உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவில் முக்கிய பங்கு வகிக்கும் தாய்மாமன் அபிலேஷின் சீர் வரிசை. அபிலேஷின் வீட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் மாட்டுவண்டிகளிலும், பெண்கள் கையில் தட்டுகள் ஏந்தியும் சீர் வரிசைகளை கொண்டு சென்றார்.
வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக ஊர்வலமாக விழா மேடைக்கு சீர் வரிசைகளை கொண்டு சென்றது எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
மேலும் நகைகள், புத்தாடைகள், மா,பலா,வாழை, மாதுளை, திராட்சை, உள்ளிட்ட பழவகைகளும், அனைத்து வகை மிட்டாய்கள், அரிசி, பருப்பு மற்றும் இனிப்பு வகைகள் என சுமார் 100 வகைகளில் சீர் கொண்டு வந்தனர்.
முடிந்தவரை தங்கள் கைகளில் சுமந்தும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் மாட்டு வண்டியிலும் கொண்டு வந்தனர். மேளதாளம் முழங்க தடபுடலான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த விழா ஏற்பாடு அந்த கிராமத்தையே வியக்க வைக்கும் வகையில் இருந்தது.
தாய்மாமன் சீர்வரிசையுடன் தனது மருமகளை விழா நடக்கும் பந்தலை நோக்கி அழைத்து வந்தது தாய்மாமனின் கெத்தே தனிதான் என்று பேசும் அளவிற்கு இருந்தது.
இந்த நிகழ்ச்சி அந்த கிராம மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…