spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

நாளை தொடங்கும் ‘கூலி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நாளை தொடங்கும் ‘கூலி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு!
கூலி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நாளை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி வேட்டையன் எனும் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

அதே சமயம் ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்திலும் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாகிர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். மேலும் இதில் பாலிவுட் நடிகர் அமீர் கான், கேமியோ ரோலில் நடிப்பதாகவும் தகவல் கசிந்து வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நாளை தொடங்கும் ‘கூலி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு!

அதன்படி ஏற்கனவே ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தது நாளை சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இதற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நடிகர் ரஜினி, ஓய்விற்கு பிறகு நாளை படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மல்டி ஸ்டாரர் படமாக உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
சென்னை தரமணி- வேளச்சேரி ரோடு மடிப்பாக்கத்தில் சென்னை குடிநீர் வாரிய வளாகத்தில் பயங்கர தீ விபத்து
01:48
Video thumbnail
தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயுடன் காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் சந்திப்பு
00:43
Video thumbnail
கர்நாடக முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பு
01:44
Video thumbnail
கலைஞர் எனும் மானமுள்ள சுயமரியாதைக்காரர் | சரித்தரத்திற்கு சொந்தக்காரர் | Kalaignar Karunanidhi
18:55
Video thumbnail
விஜய் புலி அல்ல - பூனை குட்டி | விஜய்யால் ஒன்றிய அரசை எதிர்க்க முடியாது | Vijay | CM | PM | Modi
16:25
Video thumbnail
100% நான் எந்த இடைத்தேர்தலிலும் நிற்கப் போவதில்லை - திருமாவளவன்
02:07
Video thumbnail
தேர்தலுக்குப் பிறகு தி.மு.க கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை.. சிதறிவிட்டதாக, திருமாவளவன் பேச்சு
02:10
Video thumbnail
திருவள்ளூர் மாவட்டத்தின் 25வது ஆட்சியராக ச. கவிதா பொறுப்பேற்றுக் கொண்டார்.
02:36
Video thumbnail
6 மாதம் அமைதியாக இருப்போம் என்றவர்கள் ஆறு நாட்கள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை
01:25
Video thumbnail
திருச்சிக்கு முதல்வர் ஜோசப் விஜய் வருகை.. பேருந்து வழித்தடம் மாற்றம்.. நடந்து செல்லும் பொது மக்கள்..
01:14
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img