சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி வேட்டையன் எனும் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
அதே சமயம் ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்திலும் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாகிர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். மேலும் இதில் பாலிவுட் நடிகர் அமீர் கான், கேமியோ ரோலில் நடிப்பதாகவும் தகவல் கசிந்து வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி ஏற்கனவே ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தது நாளை சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இதற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நடிகர் ரஜினி, ஓய்விற்கு பிறகு நாளை படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மல்டி ஸ்டாரர் படமாக உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…