spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

போராடி வீழ்ந்தது குஜராத் டைட்டன்ஸ் அணி!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வீழ்ந்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 39 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இந்த நிலையில், இன்று 40வது லீக் போட்டி நடைபெற்றது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 40வது லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மான் கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து டெல்லி அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா 11 ரன்னிலும் ஜாக் பிராஸர் மெகர்க் 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய அக்‌ஷர் பட்டேல் 66 ரன்னிலும் சாய் ஹோப் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடி காட்டிய ரிஷப் பண்ட் 43 பந்துகளில் 88 ரன்கள் குவித்து அணியை 200 ரன்கள் கடக்க வைத்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழந்து 224 ரன்கள் குவித்தது.

பின்னர் 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சுப்மான் கில் 6 ரன்னிலும் விருத்திமான் சஹா 39 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சாய் சுதர்ஷன் 66 ரன்னிலும் அதிரடியாக விளையாடிய மில்லர் 55 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் அணிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. ரஷித் கான் சிக்‌ஷர் பவுண்டரியும் அடித்து மிரட்டினார். கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட போது முகேஷ் குமாரின் பந்து டாட் பாலானது. இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 220 ரன்கள் எடுத்த நிலையில், 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வீழ்ந்தது. இதன் மூலம் டெல்லி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது ரிஷப் பண்டுக்கு வழங்கப்பட்டது.

Video thumbnail
மரக்குச்சியில் தாங்கும் உயர் மின்னழுத்த கம்பி... நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
00:50
Video thumbnail
ஒரு மாத தவெக ஆட்சி நன்றாகவே உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி பேட்டி.
01:05
Video thumbnail
அம்பத்தூர் | நள்ளிரவிலும் தொடரும் மின்துண்டிப்பு... ஆத்திரமடைந்த மக்கள் சாலைமறியல் போராட்டம்!
00:58
Video thumbnail
ஆவடியில் பியூஸ் கட்டை திருட்டுத் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு
00:31
Video thumbnail
பழனி முருகன் கோயிலில் மனைவி ஆர்த்தியுடன் சென்று சாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்
01:23
Video thumbnail
பயணிகள் ஏறும் நகரும் படிக்கட்டுகள் மோதியதில் 3 ஏர் இந்தியா விமானங்கள் சேதம்
00:27
Video thumbnail
கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதலமைச்சர் விஜய்
00:32
Video thumbnail
தெற்கு பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..
00:47
Video thumbnail
விருத்தாச்சலத்தில் சட்டமன்ற அலுவலகம் திறப்பு.. வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா..
00:23
Video thumbnail
தவெக எம்.எல்.ஏ பல்லவியுடன் நடந்த பிரச்சனை என்ன? - சென்னை மேயர் பிரியா விளக்கம்..
01:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img