spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சென்னை அணியை வீழ்த்தியது பஞ்சாப்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 48 லீக் போட்டிகள் நடந்துள்ளன. நேற்று 49வது லீக் போட்டி நடைபெற்றது. சென்னையில் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 49வது போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து சென்னை அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அஜிங்கியா ரஹானே 29 ரன்னிலும் ருத்ராஜ் கெய்க்வாட் 62 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சிவம் துபே ரன் ஏதுமின்றியும் ரவிந்திர ஜடேஜா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 162 ரன்கள் எடுத்தது.

பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி இரண்டாவது பேட்டிங் விளையடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரப்சிமரன் சிங் 13 ரன்களிலும் ஜானி பேர்ஸ்டோ 46 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரில்லி ரூசோ 43 ரன்களிலும் ஆட்டமிழக்க மறுபுறம் நிதானமாக ஆடிய சசாங் சிங் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் அணியானது 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் ஆட்டநாயகனாக ஹர்பீரித் பிரார் தேர்வு செய்யப்பட்டார்.

Video thumbnail
மரக்குச்சியில் தாங்கும் உயர் மின்னழுத்த கம்பி... நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
00:50
Video thumbnail
ஒரு மாத தவெக ஆட்சி நன்றாகவே உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி பேட்டி.
01:05
Video thumbnail
அம்பத்தூர் | நள்ளிரவிலும் தொடரும் மின்துண்டிப்பு... ஆத்திரமடைந்த மக்கள் சாலைமறியல் போராட்டம்!
00:58
Video thumbnail
ஆவடியில் பியூஸ் கட்டை திருட்டுத் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு
00:31
Video thumbnail
பழனி முருகன் கோயிலில் மனைவி ஆர்த்தியுடன் சென்று சாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்
01:23
Video thumbnail
பயணிகள் ஏறும் நகரும் படிக்கட்டுகள் மோதியதில் 3 ஏர் இந்தியா விமானங்கள் சேதம்
00:27
Video thumbnail
கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதலமைச்சர் விஜய்
00:32
Video thumbnail
தெற்கு பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..
00:47
Video thumbnail
விருத்தாச்சலத்தில் சட்டமன்ற அலுவலகம் திறப்பு.. வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா..
00:23
Video thumbnail
தவெக எம்.எல்.ஏ பல்லவியுடன் நடந்த பிரச்சனை என்ன? - சென்னை மேயர் பிரியா விளக்கம்..
01:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img