spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் 10 லட்சம் ஓட்டுகள் பெறுவார்? உளவுத்துறை ஷாக் ரிப்போர்ட்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 10 லட்சம் ஓட்டுகளுக்கு மேல் பெற்று மாநிலத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று அரசுக்கு உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பியுள்ளது.

திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் 10 லட்சம் ஓட்டுகள் பெறுவார்? உளவுத்துறை ஷாக் ரிப்போர்ட்

திருவள்ளுவர் நாடாளுமன்ற தொகுதியில் 10 லட்சத்து 10 ஆயிரத்து 968 ஆண் வாக்காளர்களும், 10 லட்சத்து 46 ஆயிரத்து 755 பெண் வாக்காளர்கள் என்று 20,57,723 வாக்காளர்கள் உள்ளனர்.

மேலும் இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ், அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் நல்லத்தம்பி என்பவரும் பாஜக சார்பில் பால கணபதி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீஷ் சந்தர் என்று நான்கு பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் முக்கியமான திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் தொகுதியை சேர்ந்தவர்கள் இல்லை.

நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீஷ் சந்தர்

கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மாதவரம், ஆவடி, பூவிருந்தவல்லி, திருவள்ளூர் ஆகிய 6 தொகுதிகளும் திமுக கூட்டணி வெற்றிப் பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திமுக வின் கோட்டையாக இருந்து வருகிறது.

தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

நான்கு முனை போட்டியாக இருந்தாலும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு இணையான வேட்பாளர் ஒருவரும் இல்லை என்றே கூறப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய சசிகாந்த் செந்தில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்தவர். அவர் பேசும் பேச்சு சித்தாந்தம் சார்ந்து அனைவரையும் ஈர்க்கும் படி இருப்பதால் அவர் மீது மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் வாயிலாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் நல்லத்தம்பி

மேலும் 2019ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார் 7,67,292 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட வேணுகோபால் 4,10,337 ஓட்டுகள் பெற்று 3,56,955 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

அதேபோன்று 2024 தேர்தலிலும் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் சுமார் 10 லட்சம் ஓட்டுகளுக்கு மேல் வாங்கி மாநிலத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பியுள்ளது.

பாஜக சார்பில் பால கணபதி

மேலும் அவரை எதிர்த்து போட்டியிடும் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் நல்லத்தம்பி 2.5 லட்சம் முதல் 3 லட்சம் ஓட்டுகள் வரை பெறலாம் என்றும் பாஜக வேட்பாளர் பால கணபதியும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் ஆகியோர் தலா ஒரு லட்சம் ஓட்டுகள் வரை பெறலாம் என்று அந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.

Video thumbnail
இசுலாமியர்களுக்கு துரோகம் போல, கிறித்துவர்களுக்கும் செய்ய தயாராகிவிட்டாரா பழனிசாமி? MKStalin
02:11
Video thumbnail
திருவொற்றியூரில் வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக MLA கே.பி.சங்கர்
01:26
Video thumbnail
உழவர்கரையில் மட்டும் விசிக போட்டி - விசிக தலைவர் திருமாவளவன்
02:46
Video thumbnail
"விஜயகாந்த்க்கு படம் நடித்து ஓட்டு கேட்டேன்… இப்போது மகனுக்காக நேரடியாக கேட்கிறேன்" DMK MKStalin
01:22
Video thumbnail
மோடிக்கு OPEN CHALLENGE.. -சங்கரன்கோவில் பரப்புரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு..
01:56
Video thumbnail
பிரச்சாரத்தின் போது குழந்தைக்கு "அகில்யாழன்" என்று பெயர் சூட்டிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
00:30
Video thumbnail
மதுரை மத்தி தொகுதியில் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் நடிகர் சுந்தர்.சி வேட்புமனு தாக்கல் செய்தார்
00:58
Video thumbnail
தேர்தல் நெருங்கிக்கிட்டு இருக்கு.. மக்களுக்கு என்ன சொல்றீங்க..? ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்ஷன்
00:46
Video thumbnail
தவெக மக்கள் பக்கம் நிற்கிறோம்; மக்கள் தவெக பக்கம் நிக்கிறாங்க - புதுச்சேரியில் விஜய் பேச்சு
14:36
Video thumbnail
விஜய்க்கு வேல் கொடுத்து வரவேற்ற தொண்டர்கள் #Puducherry #TVKVijay #TVK #Vijay
00:48
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img