spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

நடுவானில் விமான பயனத்தில் சக பயணியிடம் அத்துமீறல் – சென்னை பயணி கைது!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 நடுவானில் விமான பயனத்தில் சக பயணியிடம் அத்துமீறல் – சென்னை பயணி கைது! டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நடு வானில் பறந்து கொண்டு இருந்தபோது, விமானத்துக்குள், முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பயணியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆண் பயணி சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைப்பு.

விமான நிலைய போலீசார் ஆண் பயணியை கைது செய்து மேலும் விசாரணை.
டெல்லியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று, 164 பயணிகளுடன் வந்து கொண்டு இருந்தது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது, விமானத்தில் பயணித்த, சென்னை வெட்டுவாங்கேணிச் சேர்ந்த ராஜேஷ் (43), என்பவர் தனது இருக்கைக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த, 37 வயது பெண் பயணியிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து அந்தப் பெண் பயணி, விமானத்திற்குள் கூச்சலிட்டு, விமான பணிப்பெண்ணிடம் புகார் தெரிவித்தார்.

இதை அடுத்து விமான பணிப்பெண்கள், ஆண் பயணி ராஜேஷை கடுமையாக எச்சரித்தனர். அப்போது ராஜேஷ் தெரியாமல் கை பட்டு விட்டது என்று கூறி சமாளித்ததாக கூறப்படுகிறது.

ஆனாலும் ராஜேஷ், அதன் பின்பும், அதைப்போல் முன் இருக்கைக்குள் கையை விட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து அந்தப் பெண் பயணி மீண்டும் புகார் தெரிவித்ததும், விமான பணிப்பெண்கள் இதுகுறித்து, தலைமை விமானியிடம் தெரிவித்தனர்.

இதை அடுத்து தலைமை விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, இதைப்போல் விமானத்துக்குள் ஆண் பயணி ஒருவர், பெண் பயணிக்கு தொடர்ந்து, தொல்லை கொடுத்துக் கொண்டு இருக்கிறார். எனவே விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.

இதை அடுத்து விமானம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரை இறங்கியதும், விமான பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி, பயணி ராஜேஷை சுத்தி வளைத்து பிடித்தனர். அதன் பின்பு அவரை பாதுகாப்பாக விமானத்தில் இருந்து கீழே இறக்கி, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவன அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.

அப்போது பாதிக்கப்பட்ட பெண் பயணியும் இண்டிகோ ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்கு வந்து, ராஜேஷ் மீது முறைப்படி எழுத்து மூலமாக புகார் செய்தார். இதை அடுத்து இண்டிகோ ஏர்லைன்ஸ் அலுவலர்கள், ராஜேஷை சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். விமான நிலைய போலீசார் ராஜேஷ்சை கைது செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்துக்குள் பயணித்துக் கொண்டிருந்த ஒரு பெண் பயணிக்கு, ஆண் பயணி ஒருவர், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததால், ஆண் பயணியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Video thumbnail
மனைவியை கொடுமை படுத்திய விஜய் | விஜய்க்கு எதிராக திரும்பிய ரசிகர்கள் | TVK Vijay | Sangeetha |Trisha
08:53
Video thumbnail
"குணத்தை இழந்தா எல்லாமே போச்சு" வைரலாகும் விஜயின் அட்வைஸ்.. Vijay
00:38
Video thumbnail
திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்
01:04
Video thumbnail
Bro.. பணத்தை கொடுக்குறது மட்டும் மக்கள் பணி கிடையாது.. - திவ்யா சத்யராஜ் Vijay Divyasathyaraj
01:08
Video thumbnail
சென்னை திருவான்மியூரில் நடந்த திருமண விழாவில் விஜய்-திரிஷா ஜோடியாக பங்கேற்பு
01:02
Video thumbnail
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தம்பிதுரை மனு தாக்கல் செய்தார்
01:24
Video thumbnail
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாமக தலைவர் அன்புமணி மனு தாக்கல் செய்தார்
01:14
Video thumbnail
இந்தியாவிலேயே பெண்களின் உயர்கல்வி சேர்க்கை தமிழ்நாட்டில்தான் அதிகம்..
01:36
Video thumbnail
நேற்று நான் காரில் ஏறும்போது கொடுத்த ஆக்ஷன், தற்செயலாக செய்தது அது இன்றைக்கு வைரலாகிவிட்டது
00:55
Video thumbnail
"VIROSH" திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் அல்லு அர்ஜுன்
00:19
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img