spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

அழகு நிலையம் அமைத்தால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம்; ஆசையில் கவிழ்ந்த தொழிலதிபர்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

அழகு நிலையம் அமைத்தால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம்; ஆசையில் கவிழ்ந்த தொழிலதிபர்.கேரளாவில் அழகு நிலையம் ஆரம்பித்தால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி கும்பகோணத்தைச் சேர்ந்த வாலிபரிடம் ஒரு கோடியே 21 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் மாய மாகியுள்ளார். கும்பகோணத்தைச் சேர்ந்த பஷீர் அகமது என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் நான் பக்ரைன் நாட்டில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தேன். அங்கே அருகில் உள்ள அழகு நிலையத்தில் பணியாற்றிய கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த வினி என்கிற ஏஞ்சல் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

அழகு நிலையம் அமைத்தால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம்; ஆசையில் கவிழ்ந்த தொழிலதிபர்.

அந்தப் பெண் கேரளாவில் பியூட்டி பார்லர் தொழில் தொடங்க உள்ளதாகவும் அதில் அதிக வருமானம் வரும் என்றும் அந்த தொழிலில் என்னை முதலீடு செய்ய சொன்னார். அதனை நம்பி நான் வங்கி மூலமாகவும் , நேரடியாகவும் பணம் மற்றும் தங்க நகைகள் என ஒரு கோடியே 21 லட்சம் ரூபாய் கொடுத்திருந்தேன். தொழிலில் வரும் லாபத்தை எனக்கு தருவதாக உறுதியளித்திருந்தார்.

நான் வழங்கிய பணம் மற்றும் அதற்கான லாபம் குறித்து அந்த பெண்ணிடம் பலமுறை கேட்டும் தராமல் இழுத்தடித்து வந்தார். கடந்த மாதம் அவரை நேரில் சந்திக்க அவரது சொந்த ஊரான கேரளா மாநிலம் கொல்லம் பகுதிக்கு சென்றபோது அவர் அங்கு இல்லை. மேலும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்த போது அந்த பெண் என்னைப் போன்று பல பேரிடம் தொழில் தொடங்குவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.

இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்திருந்தேன். ஆனால் போலீசார் இதுவரை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. எனவே என்னை மோசடி செய்த பெண் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். எனது பணத்தையும் மீட்டு தர உதவிட வேண்டுமென்று மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது, விசாரணை செய்த நீதிபதி பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரியின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் விசாரணை செய்து இரண்டு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

 

Video thumbnail
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் குடும்பத்தலைவிகள்
00:24
Video thumbnail
எவ்வளவு பணம் கொடுத்தாலும் சந்தோஷமா வாங்கிக்கோங்க | கொளுத்தி போட்ட விஜய் - தகதகவென எரியும் களம் |TVK
24:30
Video thumbnail
சென்னை புறநகர் பகுதியில் நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டி சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்..
00:34
Video thumbnail
திராவிட மாடல் 2.0வில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,000ஆக உயர்த்துவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
00:58
Video thumbnail
5,000 ரூபாய் வங்கி கணக்கில் டெபாசிட் - மகளிருக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன முதல்வர்
02:14
Video thumbnail
நாயகியாக என்னோட முதல் படமான மௌனம் பேசியதே ரீ ரிலீஸ் ஆகுது -வீடியோ வெளியிட்டு நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி
01:44
Video thumbnail
வெல்லப்போவது தமிழ்நாடு அணியா?, டெல்லி அணியா? என்பதை தீர்மானிக்கும் தேர்தல் | MK Stalin | DMK
01:37
Video thumbnail
பாஜகவின் டப்பா எஞ்சினுக்கு முன் தமிழ்நாட்டின் சூப்பர் பாஸ்ட் எஞ்சின் என்றும் தலைகுனியாது - MK Stalin
01:23
Video thumbnail
இந்தியாவின் முதல் 'மெல்லிசை சாலை' மும்பையில் திறக்கப்பட்டுள்ளது
00:35
Video thumbnail
திருவிடந்தையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டு மேடைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை!
00:58
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img