மோமோஸ் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு – 50 பேர் மருத்துவமனையில் அனுமதி.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மோமோஸ் சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்தார் 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி இருவர் கைது.  தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸில் நடைபெறும் வாரச்சந்தைகளில் மோமோஸ் விற்பனை செய்யப்படுகிறது. இதில் சிங்காடிகுண்டா, நந்திநகர், வெங்கடேஸ்வரா காலனி மட்டுமின்றி, பல பகுதிகளில் மோமோஸ் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் மோமோஸ் சாப்பிட்ட சிங்காடிகுண்டா பகுதியை சேர்ந்த ரேஷ்மா உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது மகன் பஞ்சாரா ஹில்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் மேலும் மோமோஸ் சாப்பிட்ட 50 க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரேஷ்மா இறந்த சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராக புகார் அளித்ததால் பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் வழக்குப் பதிந்து மோமோஸ் கடை நடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

வெல்கம் டு மை யுனிவர்ஸ் என்று வரவேற்ற – லோகேஷ் கனகராஜ்.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img