spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

திருமலையில் பணிபுரியும் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும் – அறிவித்த தேவஸ்தானம்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) வாரியத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் பி.ஆர்.நாயுடு, திருமலை வெங்கடேஸ்வரா அவா்கள் கோயில் வளாகத்தில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்றாா் .திருமலை இந்து நம்பிக்கை மற்றும் புனிதத்தின் அடையாளமாக இருப்பதை உறுதி செய்வதில் தனது உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ளாா்.

திருமலையில் பணிபுரியும் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும் - அறிவித்த தேவஸ்தானம்

 

அவர் இது குறித்து கூறுகையில் “திருமலையில் பணிபுரியும் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும். அதுவே எனது முதல் முயற்சியாகும். இதில் பல சிக்கல்கள் உள்ளன. அதை நாம் கவனிக்க வேண்டும். இந்து அல்லாத ஊழியர்களை வேறு அரசு துறைகளுக்கு மாற்றலாமா? அல்லது விருப்ப ஓய்வு அளிக்கலாமா? என்பதை ஆந்திர அரசுடன் கலந்தாலோசிப்பதாக’’ அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திரப் பிரதேச முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு மற்றும் என்டிஏ அரசாங்கத்தின் நியமனத்திற்கு நன்றி தெரிவித்தார். இது எனது வாழ்க்கையில் ஒரு “திருப்புமுனை” என்று தெரிவித்தார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் முந்தைய நிர்வாகத்தை அவர் விமர்சித்தார். அவர்கள் கோவிலின் நிர்வாகத்தை தவறாகக் கையாண்டதாக குற்றம் சாட்டினார். இது திருமலையின் புனிதத்தன்மையின் வீழ்ச்சி என்று அவர் விவரித்தார்.
வெங்கடேஸ்வர பகவான் மீதான அவரது பக்தியை எடுத்துரைத்த அவர், தவறான நிர்வாகத்தின் காரணமாக கடந்த ஐந்தாண்டுகளாக திருமலைக்குச் செல்வதைத் தவிர்த்ததாகவும், ஆனால் முந்தைய ஆண்டுகளில் தவறாமல் சென்று வந்ததாகவும் கூறினார்.

ஓசூர் : காரில் சென்ற மூன்று பேர் ஏரியில் மூழ்கி உயிரிழப்பு

ஆந்திரப் பிரதேச அரசு திருப்பதி தேவஸ்தான வாரியத்தை மீண்டும் அமைத்துள்ளது. இதில் பி.ஆர்.நாயுடு உட்பட 24 உறுப்பினர்கள் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிறுவனர் சுசித்ரா போன்றவர்கள் உள்ளனர். திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு உள்ளிட்ட தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக சமீபத்திய சர்ச்சையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Video thumbnail
இனி நல்லதே நடக்கும் - பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த பின் அன்புமணி பேட்டி
00:34
Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஹன்சிகா வழிபாடு
01:39
Video thumbnail
பாமக நிறுவனர் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் தனது குடும்பத்தினருடன் சந்தித்தார் அன்புமணி..
02:14
Video thumbnail
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கட்டண உயர்வு இல்லை.. - அமைச்சர் ரமேஷ்
01:34
Video thumbnail
"திரும்பவும் ரஜினி சாருடன் படம்.. எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த கமல் சாருக்கு நன்றி”- நடிகை சிம்ரன்
01:34
Video thumbnail
40 வருஷத்துக்கு முன்ன நாங்க எடுத்த முடிவு.. ரஜினி குறித்து மேடையில் சொன்ன கமல்
02:03
Video thumbnail
பணி நியமன ஆணை பெற்றவர்களுடன் அமர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட முதலமைச்சர் விஜய்.!
01:16
Video thumbnail
"கமல் செஞ்ச உதவிக்கு.." ரஜினி சொன்ன உண்மை நிகழ்வு..
02:03
Video thumbnail
நான் பேசினாலே Problem தான்.. தர்மன் பட விழாவில் ரஜினிகாந்த் பேச்சு.. THALAIVAR173 Rajinikanth
00:59
Video thumbnail
தான் முதல்வர் என்பதையே மறந்த விஜய்...
02:16
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img