spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

தேர்தல் முடியும் வரை காங்கிரஸ் கட்சி மீது நடவடிக்கை இல்லை

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தேர்தல் முடியும் வரை காங்கிரஸ் கட்சி மீது நடவடிக்கை இல்லை

தேர்தல் முடியும் வரை காங்கிரஸ் கட்சி மீது நடவடிக்கை இல்லை – அமலாக்கத்துறை உறுதி அளித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை வருமான வரி தொடர்பான விவகாரத்தில் காங்கிரஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று வருமானவரித்துறை உச்சநீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.

தேர்தல் முடியும் வரை காங்கிரஸ் கட்சி மீது நடவடிக்கை இல்லை

கடந்த பல்வேறு கால கட்டங்களில் (நிதி ஆண்டுகளில்) வருமானவரி கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என்று கூறி அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை 1,700 கோடி ரூபாய் அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு மூன்று சம்மன்களை வருமான வரித்துறை அனுப்பியுள்ள நிலையில், வருமானவரித்துறை நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு நீதிபதி பி.வி. நாகரத்தினா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

Congress Party

அப்போது காங்கிரஸ் கட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ஏற்கனவே வருமானவரித்துறை இரண்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும், மூன்றாவது நோட்டீஸ் அண்மையில் தான் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கப்பெற்றதாக கூறிய அவர், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே மக்களவைத் தேர்தல் நேரத்தில் இது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்கிறது என நீதிபதிகளிடம் சுட்டிக் காட்டி வாதிட்டார்.

அப்போது வருமானவரித்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா, மக்களவைத் தேர்தல் முடியும் வரை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து 1,700 கோடி ரூபாய் அபராத தொகையை வசூலிக்க வருமானவரித்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காது என உறுதியளித்தார்.

https://www.mugavari.in/today-weather-report/

வருமானவரித் துறை முடிவுக்கு காங்கிரஸ் கட்சி தரப்பு வழக்கறிஞர் ஆச்சரியம் தெரிவித்த நிலையில், எப்போதும் எதிர் தரப்பை எதிர்மறையாக நினைக்க கூடாது என நீதிபதிகள் காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுரை வழங்கிய நீதிபதிகள் வருமானவரித்துறை தரப்பு உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு எதிரான எந்த ஒரு பாதகமான நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என அமலாக் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.

Video thumbnail
வேலூரில் மாமூல் கேட்டு த.வெ.க-வினர் மிரட்டல்
02:15
Video thumbnail
பேட்டரி காரில் தலைமைச் செயலகத்தை சுற்றிப்பார்க்கும் முதலமைச்சர் விஜய்
00:50
Video thumbnail
விசிகவின் வன்னி அரசுவை அமைச்சர் நாற்காலியில் அமரவைத்தார் விசிக தலைவர் திருமாவளவன்
01:00
Video thumbnail
அரசினர் தோட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நேரில் ஆய்வு செய்தார்..
01:01
Video thumbnail
அமைச்சராக பதவியேற்றார் ஐயூஎம்எல் எம்எல்ஏ ஏ.எம்.ஷாஜகான்
02:25
Video thumbnail
அமைச்சராக பதவியேற்றார் விசிக எம்எல்ஏ வன்னி அரசு
02:14
Video thumbnail
"ரூ.2.5 லட்சம் கோடி கடனில் மின்வாரியம் இருக்கிறது"
01:59
Video thumbnail
அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் - விசிக தலவைர் தொல்.திருமாவளவன்
02:14
Video thumbnail
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை சந்தித்த ஐயுஎம்எல் நிர்வாகிகள்..
00:25
Video thumbnail
புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுடன் ஆளுநர் அர்லேக்கர் மற்றும் முதல்வர் விஜய் குழு புகைப்படம்..
01:01
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img