கோவையில் தனக்கு “சூப்பர் பவர்” இருப்பதாக எண்ணி நான்காவது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவன் – தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி. ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் பிரபு (19). இவர் கோவை மலுமிச்சம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனக்கு “சூப்பர் பவர்” இருப்பதாக தனது நண்பர்கள் மற்றும் விடுதியில் தங்கியிருக்கும் சக மாணவர்களிடம் கூறிவந்துள்ளார்.
சூப்பர் ஹீரோ மற்றும் அசாத்திய நிகழ்வுகளின் வீடியோக்களை பிரபு தனது செல்போனில் பார்த்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கோவை மயிலேரிபாளையம் பகுதியில் உள்ள கல்லூரி விடுதியில் இருந்த பிரபு நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென நான்காவது மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து சாகசம் செய்துள்ளார். இதில் கீழே விழுந்த பிரபு படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். அவரை அங்கிருந்த மாணவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…