தேனி மாவட்டம் கூடலூரில் சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா ஆயில் (எண்ணெய்) தயாரித்து விற்பனை செய்ய முயன்ற மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா எண்ணெய்யை பறிமுதல் செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளாவிற்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சாவினால் தயார் செய்யப்பட்ட ஆயில் (எண்ணெயை) விற்பனை செய்யப்படுவதாக கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலினைத் தொடர்ந்து விரைந்து சென்ற போலீசார் குமுளி செல்லும் கேரள நெடுஞ்சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகப்படும் படியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ஒரு கிலோ எடை கொண்ட கஞ்சா ஆயில் (எண்ணெய்யை) விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது. மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கூடலூர் நகர் பகுதியை சேர்ந்த நடராஜன், பிரபு மற்றும் லோயர் கேம்ப் பகுதியைச் சேர்ந்த நடாராஜன் என்பதும் தெரிய வந்தது. மூன்று பேரும் கஞ்சாவில் (எண்ணெய்)ஆயில் தயாரித்து விற்பனை செய்ய வந்தது தெரியவந்துள்ளது.
மேலும் அவர்கள் மூன்று பேரையும் கைது செய்த போலீசார் சுமார் மூன்று லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ எடை கொண்ட கஞ்சா ஆயிலையும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…