திருப்பூர் தாராபுரம் சாலையில் காரில் கள்ளச்சாராயம் கடத்தி வருவதாக மாநகர மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் தாராபுரம் ரோடு உஷா தியேட்டர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நண்பரது இல்ல விசேஷத்திற்காக வெள்ளகோவில் சென்ற போது அங்கு 5 லிட்டர் கள்ள சாராயம் கொடுத்ததும், மூன்று லிட்டர் சாராயத்தை 5 பேரும் சேர்ந்து அங்கு குடித்துவிட்டு மீதமுள்ள 2 லிட்டர் கள்ள சாராயத்தை காரில் எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.
திருப்பூர் தாராபுரம் சாலையில் காரில் கள்ளச்சாராயம் கடத்தி வருவதாக மாநகர மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் மாநகர மதுவிலக்கு காவல் ஆய்வாளர் பிரபா தேவி தலைமையில் போலீசார் தாராபுரம் ரோடு உஷா தியேட்டர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரினை வழிமறித்து சோதனை செய்தபோது திடீரென அந்தக் காரில் இருந்து இரண்டு பேர் இறங்கி ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து அந்த காரில் இருந்த மூன்று பேரிடம் விசாரணை நடத்தியதில் மூன்று பேரும் அதிக மது போதையில் இருந்தனா். இந்நிலையில் காரை சோதனையிட்ட போது காரில் 2 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டது இதனால் காரில் இருந்தவர்களை மதுவிலக்கு போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசார் விசாரணையில் டி.கே.டி மில் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி(40), பிரேம்குமார்(37) சக்தி(32) என்பதும், அவர்கள் நண்பரது இல்ல விசேஷத்திற்காக வெள்ளகோவில் சென்ற போது அங்கு 5 லிட்டர் கள்ள சாராயம் கொடுத்ததும், மூன்று லிட்டர் சாராயத்தை 5 பேரும் சேர்ந்து அங்கு குடித்துவிட்டு மீதமுள்ள 2 லிட்டர் கள்ள சாராயத்தை காரில் எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. அவர்கள் மாநகர மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 2 லிட்டர் கள்ளச்சாராயம், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தப்பியோடிய கிருஷ்ணகுமார், தியானேஸ்வரன் ஆகியோரை வெள்ளக்கோவில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…