spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

தீபாவளி பட்டாசு கடை வைக்க விரும்புவோருக்கு அரசின் அறிவிப்பு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தீபாவளி பட்டாசு கடை வைக்க விரும்புவோருக்கு அரசின் அறிவிப்பு!

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர், ஆன்லைன் வாயிலாக வரும் அக்டோபர்19-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: “தமிழகத்தில் வரும் அக்டோபர் 30-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஆகையால் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர்கள் அரசின் நிபந்தனைகளின்படி ஆன்லைன் மூலமாக https://www.tnesevai.tn.gov.in என்ற இணைய தள பக்கத்தில் இந்த மாதம் 19-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இ-சேவை மையங்களிலும் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக மட்டுமே உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.

தற்காலிக பட்டாசு உரிமம் பெற பிற மாவட்டங்களில் உள்ளது போல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வழிமுறை சென்னை காவல் துறையின் மண்டலங்களான கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு, ஆவடி மற்றும் தாம்பரம் மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

முத்தாரம்மன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 3 பலி , லோடு ஆட்டோ – மினி லாரி நேருக்கு நேர் மோதல் .

அக்டோபர்19-ம் தேதிக்குப்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேற்படி விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதெனில், அல்லது தற்காலிக உரிம ஆணையையும், நிராகரிக்கப்பட்டதெனில், அதற்கான விவரத்தை இணையதளம் வாயிலாகவே மனுதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் அனுமதியின்றி, உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தற்காலிக பட்டாசுக்கடை அமைக்க உரிமம் கோரி விண்ணப்பம் அளிப்போர், பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத ஆட்சேபனையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். விபத்தில்லாத மகிழ்ச்சியான தீபாவளிப் பண்டிகையை கொண்டாடிட ஒத்துழைப்பு தரவேண்டும்” என அதில் அவர் கூறிப்பிட்டுள்ளார்

 

Video thumbnail
வால்பாறை அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த குட்டி யானை; நகராமல் அங்கேயே நின்ற தாய் யானை
01:19
Video thumbnail
ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலில் குல்தீப் யாதவ் & வருண் சக்கரவர்த்தி சாமி தரிசனம்
01:20
Video thumbnail
1 லட்சம் பேர் பங்கேற்கும் திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்புக்காக நடக்கும் பிரம்மாண்ட ஏற்பாடுகள்
00:54
Video thumbnail
மொத்த இந்தியாவுடன் தான் எனது கூட்டணி; கூட்டணியை விட எனக்கு கொள்கைதான் முக்கியம் - எம்.பி.கமல்ஹாசன்
01:13
Video thumbnail
தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின் கம்பியில் மோதியதில் தீப்பிடித்தது
00:31
Video thumbnail
திராவிட மாடல் கழகத்தை மீண்டும் இளைஞர்களிடம் ஒப்படைக்க இளைஞரணியை தொடங்கியுள்ளோம்: மு.க.ஸ்டாலின்
01:57
Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை மீனாட்சி சௌத்ரி சாமி தரிசனம்
01:07
Video thumbnail
மாமேதை கார்ல் மார்க்ஸின் திருவுருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
00:51
Video thumbnail
என்.எஸ்.கிருஷ்ணனின் புதுப்பிக்கப்பட்ட சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
00:52
Video thumbnail
லிப்ட் உள்ளே ஹீலியம் பலூன்கள் வெடித்து தீ விபத்து; நூலிழையில் உயிர் தப்பிய மூவர்
00:25
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img