திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் 10 லட்சம் ஓட்டுகள் பெறுவார்? உளவுத்துறை ஷாக் ரிப்போர்ட்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 10 லட்சம் ஓட்டுகளுக்கு மேல் பெற்று மாநிலத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று அரசுக்கு உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பியுள்ளது.

திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் 10 லட்சம் ஓட்டுகள் பெறுவார்? உளவுத்துறை ஷாக் ரிப்போர்ட்

திருவள்ளுவர் நாடாளுமன்ற தொகுதியில் 10 லட்சத்து 10 ஆயிரத்து 968 ஆண் வாக்காளர்களும், 10 லட்சத்து 46 ஆயிரத்து 755 பெண் வாக்காளர்கள் என்று 20,57,723 வாக்காளர்கள் உள்ளனர்.

மேலும் இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ், அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் நல்லத்தம்பி என்பவரும் பாஜக சார்பில் பால கணபதி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீஷ் சந்தர் என்று நான்கு பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் முக்கியமான திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் தொகுதியை சேர்ந்தவர்கள் இல்லை.

நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீஷ் சந்தர்

கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மாதவரம், ஆவடி, பூவிருந்தவல்லி, திருவள்ளூர் ஆகிய 6 தொகுதிகளும் திமுக கூட்டணி வெற்றிப் பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திமுக வின் கோட்டையாக இருந்து வருகிறது.

தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

நான்கு முனை போட்டியாக இருந்தாலும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு இணையான வேட்பாளர் ஒருவரும் இல்லை என்றே கூறப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய சசிகாந்த் செந்தில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்தவர். அவர் பேசும் பேச்சு சித்தாந்தம் சார்ந்து அனைவரையும் ஈர்க்கும் படி இருப்பதால் அவர் மீது மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் வாயிலாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் நல்லத்தம்பி

மேலும் 2019ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார் 7,67,292 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட வேணுகோபால் 4,10,337 ஓட்டுகள் பெற்று 3,56,955 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

அதேபோன்று 2024 தேர்தலிலும் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் சுமார் 10 லட்சம் ஓட்டுகளுக்கு மேல் வாங்கி மாநிலத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பியுள்ளது.

பாஜக சார்பில் பால கணபதி

மேலும் அவரை எதிர்த்து போட்டியிடும் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் நல்லத்தம்பி 2.5 லட்சம் முதல் 3 லட்சம் ஓட்டுகள் வரை பெறலாம் என்றும் பாஜக வேட்பாளர் பால கணபதியும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் ஆகியோர் தலா ஒரு லட்சம் ஓட்டுகள் வரை பெறலாம் என்று அந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.

Video thumbnail
ராமேஸ்வரம் காந்தி நகரில் தொடர் மழை காரணமாக வீட்டுக்குள் புகுந்த மழை நீர்
02:36
Video thumbnail
விசாகப்பட்டினம்-விஜயவாடா பிரிவுக்கு இடையே நவீனமயமாக்கல் பணிகள் காரணமாக 16 ரயில்கள் ரத்து
00:51
Video thumbnail
அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பு Press Meet | mrk panneerselvam
02:50
Video thumbnail
டிட்வா புயல் : குழந்தையை ஆபத்தான முறையில் எடுத்து செல்லும் பெற்றோர், நெஞ்சை பதற வைக்கும் வீடியோ
00:41
Video thumbnail
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியை மீண்டும் வழங்க கோரி 13 வது நாளாக உண்ணாவிரதம்
00:22
Video thumbnail
நெல்லை அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு
01:38
Video thumbnail
கேரள மாநிலம் கோழிக்கோடு பேபி மெமோரியல் மருத்துவமனையில் மிகப்பெரிய தீ விபத்து
00:21
Video thumbnail
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு | பகுதி 3
15:43
Video thumbnail
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு | பகுதி 2
13:31
Video thumbnail
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு | பகுதி 1
14:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img