கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15ம் தேதி வரை நீதிமன்ற காவல்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15ம் தேதி வரை நீதிமன்ற காவல்

நீங்க நடத்தின விசாரணை போதும் – கெஜ்ரிவாலை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய நீதிபதி.

அமலாக்கத் துறையால் கடந்த 21-ம் தேதி கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கியது டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம்.

கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15ம் தேதி வரை நீதிமன்ற காவல்

கடந்த 21 ஆம் தேதி டெல்லியில் உள்ள இல்லத்தில் வைத்து இரவோடு இரவாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். மார்ச் 22 ஆம் தேதி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவரை 7 நாட்கள் (மார்ச் 28) விசாரணை காவல் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.

அமலாக்க துறைக்கு வழங்கப்பட்ட விசாரணை காவல் கடந்த 28ம் தேதி நிறைவடைந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்போது அமலாக்கத்துறை தரப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக் கூறி மேலும் 7 நாட்கள் (ஒரு வாரம்) அமலாக்கத்துறை விசாரணை காவலில் நீட்டிக்க கோரிக்கையை வைத்தது.

7 – நாட்கள் தர முடியாது என்று கூறிய நீதிபதி அரவிந்த் கெஜ்ரிவாலின் போலீஸ் காவலை  ஏப்ரல் 1ம் தேதி (இன்று) வரை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து உத்தாவிட்டார். இரண்டாவது முறை நீடித்து வழங்கப்பட்ட நான்கு நாட்கள் விசாரணை காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Arvind Kejriwal

அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறியதோடு, கெஜ்ரிவாலை நீதிமன்ற காவலில் வைக்க கோரிக்கை வைத்தனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் அமலாக்கத்துறை கோரிக்கைக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்காததற்கும் என்ன சம்பந்தம்? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அமலாக்கத்துறை தரப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் அவரது செல்போன் பாஸ்வேர்ட் உள்ளிட்டவை பற்றிய விவரங்களை தெரிவிக்கவில்லை எனவும், வரும் நாட்களில் மீண்டும் அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம் வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

https://www.mugavari.in/we-will-fulfill-our-demands-once-there-is-a-change/

இதனையடுத்து நீதிபதி, அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். நீதிமன்ற காவலில் இருக்கும் நாட்களில் அரவிந்த் கெஜ்ரிவால், பகவத் கீதை , ராமாயணம் மற்றும் பத்திரிகையாளர் நீர்ஜா சவுத்ரி எழுதிய பிரதமர்கள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள் என்ற மூன்று புத்தகங்களை எடுத்து செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கையை அவரின் வழக்கறிஞர்கள் நீதிபதி முன் வைத்தார்கள்.

Video thumbnail
அவளை எதுவும் தடுக்கவில்லை... அவள் சொன்ன முதல் வார்த்தையே... 'அப்பா'தான்! | appa | love | kavithai |
07:16
Video thumbnail
கடற்கரை சுத்தம் செய்யும் பணியில் ரெஜினா.... | cleaning | marina | sup club | regina |
00:37
Video thumbnail
ஜூன்-4 பின்னர் எடப்பாடி பழனிச்சாமியின் நிலைமை என்ன ஆகும்? | ADMK | Again Sasikala | BJP | Congress |
06:21
Video thumbnail
ஆவடி அருகே இரட்டை கொலை - காரணம் என்ன? Double murder near Avadi - what is the reason? | avadi |
03:11
Video thumbnail
2026 அதிமுகவின் வியூகம் மாறுமா? திமுக செய்ய வேண்டியது என்ன? | dmk | admk | strategy | Part - 2
14:01
Video thumbnail
உள்ளாட்சி நிர்வாகத்தில் குளறுபடி..திமுக திருத்தி கொள்ள வேண்டும்.. DMK needs to be corrected |admk|
13:01
Video thumbnail
சாதிவாரி கணக்கெடுப்பு... ராகுல் காந்தி உறுதி.. வடமாநிலங்களில் விவாதமாக மாறியது... | bjp | congress |
07:53
Video thumbnail
நம்பிக்கை இழந்த மோடி..மோடியின் இன வெறி பேச்சால் ராகுல் பிரதமராக வாய்ப்பு..| bjp | congress | korea |
06:44
Video thumbnail
பாஜக 150 -க்கு மேல் தாண்டாது... வட மாநில ராஜபுத்திர மக்கள் கொந்தளிப்பு... | bjp | congress | musk |
13:14
Video thumbnail
மாறுகிறது களம்..Elon musk கொடுத்த Shock.அடுத்த பிரதமர் ராகுல் காந்தியை சந்திக்க Elon musk திட்டம்
02:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img