spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

பழனியில் சோகம் – கடன் பிரச்சனையால் : ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேர் தற்கொலை .

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பழனி முல்லை நகரில் ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேர் தற்கொலை- தந்தை இளங்குமரன், தாய் ரேணுகாதேவி, மகள் தேன்மலர் மூவரும் உயிரிழந்தனர். கடன் பிரச்சனையால் தற்கொலை மீடிவு எடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பழனி முல்லை நகரில் வசித்து வருபவர் இளங்குமரன். பழனியில் எலக்ட்ரிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ரேணுகாதேவி மேல்கரைபட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியை ஆக பணியாற்றி வருகிறார். இவரது மகள் தேன்மலர் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மகன் வினித் கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இந்தநிலையில் வீட்டிலிருந்த இளங்குமரன் மனைவி ரேணுகாதேவி மற்றும் மகள் தேன் மலர் மூவரும் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அருகில் இருந்து வீட்டில் இருந்தவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கணவனுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கணவன் கொலை –மனைவி கைது .

தொலைபேசியை யாரும் எடுத்து பதில் கூறாததால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மூவரும் இறந்த நிலையில் கடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். தாய் ரேணுகாதேவி, மகள் தேன் மலர் தலையில் காயம் அடைந்த நிலையிலும் தந்தை இளங்குமரன் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பழனியில் சோகம் கடன் பிரச்சனையால்  : ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேர் தற்கொலை

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இளங்குமரன் கடன் பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்தது தெரியவந்துள்ளது. வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் தனது மனைவி மற்றும் மகள் இருவருக்கும் மயக்க மருந்து கொடுத்து கொலை செய்துவிட்டு பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பழனி நகர போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் கடன் பிரச்சினையால் மனைவி மற்றும் மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video thumbnail
நடிகர் தனுஷுக்கு வெற்றி வேல் கொடுத்து உற்சாக வரவேற்பளித்த ரசிகர்கள்..
00:37
Video thumbnail
விஜய் வெற்றி பெறுவாரா?
01:11
Video thumbnail
மே 4-க்கு பிறகு தவெக தொண்டர்களின் மனநிலை..
01:29
Video thumbnail
தவெக அமைச்சரவை பட்டியல் வெளியீடு..
01:08
Video thumbnail
தவெக அமைச்சரவை பட்டியல் வெளியீடு | மே 4-க்கு பிறகு தவெக தொண்டர்களின் மனநிலை | TVK | Vijay | Election
13:32
Video thumbnail
திருமணம் முடிந்த கையோடு வந்து வாக்கு செலுத்திய புதுமண தம்பதி
01:15
Video thumbnail
சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் ஜனநாயக கடமையாற்றிய சூர்யா, ஜோதிகா
01:15
Video thumbnail
சென்னை வளசரவாக்கத்தில் தனது மனைவியுடன் வந்து வாக்களித்த நடிகர் யோகிபாபு
01:32
Video thumbnail
சென்னை நீலாங்கரை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார் விஜய்
01:00
Video thumbnail
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் சேவியர் மிடில் ஸ்கூலில் வாக்களித்தார் நடிகை த்ரிஷா
01:11
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img