பஞ்சாப் அணிக்கு 163 ரன்கள் இலக்கு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி முதலாவது பேட்டிங்கில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 162 ரன்கள் எடுத்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 48 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இன்று 49வது லீக் போட்டி நடைபெற்றது. சென்னையில் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 49வது போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.

 

இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து சென்னை அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அஜிங்கியா ரஹானே 29 ரன்னிலும் ருத்ராஜ் கெய்க்வாட் 62 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சிவம் துபே ரன் ஏதுமின்றியும் ரவிந்திர ஜடேஜா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 162 ரன்கள் எடுத்தது. பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி இரண்டாவது பேட்டிங் விளையாடவுள்ளது.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img