spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 48 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இன்று 49வது லீக் போட்டி நடைபெறுகிறது. சென்னையில் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 49வது போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 5 வெற்றி 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திலுள்ளது. பஞ்சாப் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 3 வெற்றி 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திலுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 28 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 15 முறையும் பஞ்சாப் அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த போட்டியில் கொல்கத்தா அணியை அபாரமாக வீழ்த்திய பஞ்சாப் அணி இப்போட்டியில் வெற்றி பெற முயற்சிக்கும். அதே சமயம் சென்னை அணி தனது வெற்றியை தொடர முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து சென்னை அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக அஜிங்கியா ரஹானேவும் ருத்ராஜ் கெய்க்வாடும் களமிறங்கவுள்ளனர்.

Video thumbnail
தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயுடன் காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் சந்திப்பு
00:43
Video thumbnail
கர்நாடக முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பு
01:44
Video thumbnail
கலைஞர் எனும் மானமுள்ள சுயமரியாதைக்காரர் | சரித்தரத்திற்கு சொந்தக்காரர் | Kalaignar Karunanidhi
18:55
Video thumbnail
விஜய் புலி அல்ல - பூனை குட்டி | விஜய்யால் ஒன்றிய அரசை எதிர்க்க முடியாது | Vijay | CM | PM | Modi
16:25
Video thumbnail
100% நான் எந்த இடைத்தேர்தலிலும் நிற்கப் போவதில்லை - திருமாவளவன்
02:07
Video thumbnail
தேர்தலுக்குப் பிறகு தி.மு.க கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை.. சிதறிவிட்டதாக, திருமாவளவன் பேச்சு
02:10
Video thumbnail
திருவள்ளூர் மாவட்டத்தின் 25வது ஆட்சியராக ச. கவிதா பொறுப்பேற்றுக் கொண்டார்.
02:36
Video thumbnail
6 மாதம் அமைதியாக இருப்போம் என்றவர்கள் ஆறு நாட்கள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை
01:25
Video thumbnail
திருச்சிக்கு முதல்வர் ஜோசப் விஜய் வருகை.. பேருந்து வழித்தடம் மாற்றம்.. நடந்து செல்லும் பொது மக்கள்..
01:14
Video thumbnail
உங்களுக்கு நடந்த அநீதியை நீங்களே சொல்லத் தயங்கினால் யார்தான் சொல்வார்கள்? இயக்குநர் அமீர்
01:51
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img