spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ரோகித் சர்மாவின் சதம் வீண் – மும்பை அணியை வீழ்த்தியது சென்னை அணி!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 28 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், நேற்று 29வது லீக் போட்டி நடைபெற்றது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் காரணமாக சென்னை அணி முதலாவதாக பேட்டிங் செய்யவுள்ளது.

சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரஹானே 5 ரன்னிலும் ரச்சின் ரவீந்திரா 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட் 69 ரன்னில் ஆட்டமிழக்க, சிவம் துபே 66 ரன்னில் ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியில் அதிரடி காட்டிய எம்எஸ் தோனி 4 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து அணியை 200 ரன்கள் கடக்க வைத்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழந்து 206 ரன்கள் குவித்தது.

பின்னர் 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இஷான் கிஷான் 23 ரன்னில் ஆட்டமிழக்க ரோகித் சர்மா 105 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் ரன் ஏதுமின்றியும் திலக் வர்மா 31 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 186 ரன்கள் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சென்னை அணி தரப்பில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய மதிஷா பதிரனா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Video thumbnail
திருவள்ளூர் மாவட்டத்தின் 25வது ஆட்சியராக ச. கவிதா பொறுப்பேற்றுக் கொண்டார்.
02:36
Video thumbnail
6 மாதம் அமைதியாக இருப்போம் என்றவர்கள் ஆறு நாட்கள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை
01:25
Video thumbnail
திருச்சிக்கு முதல்வர் ஜோசப் விஜய் வருகை.. பேருந்து வழித்தடம் மாற்றம்.. நடந்து செல்லும் பொது மக்கள்..
01:14
Video thumbnail
உங்களுக்கு நடந்த அநீதியை நீங்களே சொல்லத் தயங்கினால் யார்தான் சொல்வார்கள்? இயக்குநர் அமீர்
01:51
Video thumbnail
குதிரை பேரம் குறித்து விழுந்த கேள்வி - அமைச்சர் CTR நிர்மல் குமார் அழுத்தி சொன்ன பதில்
02:04
Video thumbnail
காணாமல் போன 5 வயது சிறுமி.. சில நிமிடங்களில் மீட்ட RPF பெண் காவலர்..
00:38
Video thumbnail
ரூ.10 கூடுதலுக்கு வாக்குவாதம்.. டாஸ்மாக் பணியாளரை செருப்பால் அடித்த மதுப்பிரியர்..
00:52
Video thumbnail
தனது மேலாளர் ஜெகதீஷ் இல்ல விழாவில் கலந்துகொள்ள வந்த முதல்வர் விஜய்
00:31
Video thumbnail
"விஜய் 100% நல்லது செய்வார்!" - நடிகர் அர்ஜுன் நம்பிக்கை!
00:54
Video thumbnail
சனாதனம் குறித்த கேள்வி.. நடிகர் அர்ஜுன் சொன்ன விளக்கம்..
01:01
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img