சுறாவளியாய் சுழன்று அடித்த சூர்யகுமார் யாதவ் – பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 192 ரன்கள் குவித்துள்ளது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 32 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், இன்று 33வது லீக் போட்டி நடைபெற்றது. முல்லாப்பூரில் உள்ள மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 33வது லீக் போட்டியில் சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து மும்பை அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இஷான் கிஷான் 8 ரன்னிலும் ரோகித் சர்மா 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 78 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய திலக் வர்மா 34 ரன்களிலும் டிம் டேவிட் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 192 ரன்கள் குவித்தது. பின்னர் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சாம் கரண் 8 ரன்னிலும் பிரப்சிம்ரன் சிங் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரில்லி ரூசோ பும்ரா பந்துவீச்சில் கிளீன் போல்டானார். தற்போது வரை பஞ்சாப் அணியானது 2 ஓவர்கள் முடிவில் 11 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகள் இழந்து திணறி வருகிறது.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img