spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ஜெய்ஸ்வாலின் அபார சதத்தால்…. ராஜஸ்தான் அணி எளிதில் வெற்றி!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் நேற்றிரவு நடைபெற்ற 38வது லீக் போட்டியில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 18.4 ஓவர்களில் 183 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 37 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இந்த நிலையில், நேற்று 38வது லீக் போட்டி நடைபெற்றது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 38வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ராஜஸ்தான் அணி பந்துவீசியது,. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இஷான் கிஷான் ரன் ஏதுமின்றியும் ரோகித் சர்மா 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 10 ரன்னிலும் திலக் வர்மா 65 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடியாக விளையாடிய நெஹால் வதேரா 24 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 179 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சு தரப்பில் சந்தீப் சர்மா 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

பின்னர் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜாஸ் பட்லரும் 35 ரன்னில் ஆட்டமிழக்க யாஷ்வி ஜெய்ஸ்வால் 60 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 38 ரன்கள் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் அணியானது 18.4 ஓவர்கள் 1 விக்கெட்டு இழந்து 183 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது 5 விக்கெட்டுகள் எடுத்த சந்தீப் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.

Video thumbnail
சென்னை வளசரவாக்கத்தில் தனது மனைவியுடன் வந்து வாக்களித்த நடிகர் யோகிபாபு
01:32
Video thumbnail
சென்னை நீலாங்கரை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார் விஜய்
01:00
Video thumbnail
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் சேவியர் மிடில் ஸ்கூலில் வாக்களித்தார் நடிகை த்ரிஷா
01:11
Video thumbnail
திருவான்மியூர் வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்திய நடிகர் அஜித்
00:39
Video thumbnail
திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்.. - சண்முகம்
01:35
Video thumbnail
தனது வாக்கினை பதிவு செய்தார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்..
00:53
Video thumbnail
"நாளை ஒருநாள் நம்மிடம் இருக்கும் ஒரே ஒரு ஆயுதம் இந்த ஒரு விரல் தான்" - நடிகை வரலட்சுமி சரத்குமார்
00:25
Video thumbnail
சிங்கப்பூர் To திருச்சிக்கு வரும் பயணிகளிடம் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தைக் கூறும் விமானி
00:23
Video thumbnail
கார் ரேஸ் முடித்து வாக்களிப்பதற்காக சென்னை திரும்பிய நடிகர் அஜித் குமார்
00:33
Video thumbnail
திமுகக்கும், மற்றவர்களுக்கும் ஓட்டு போட்டாலும், இறுதியில் பாஜகக்கு தான் பலன்
00:48
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img