spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ஐபிஎல் நிர்வாகம் போட்டி ஊதியத்திலிருந்து 30% அபராதம் விதித்துள்ளது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 55 லீக் போட்டிகள் நடந்துள்ளன. நேற்று 56வது லீக் போட்டி நடைபெற்றது. டெல்லி உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 56வது லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து டெல்லி அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. டெல்லி அணியில் அதிகபட்சமாக அபிஷேக் போரேல் 65 ரன்கள் குவித்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 221 ரன்கள் குவித்தது.

பின்னர் 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ராஜஸ்தான் அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. அணியின் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 86 ரன்கள் குவித்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் 8 விக்கெட்டுகள் இழந்து 201 ரன்கள் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் ஸ்டேட் திசையில் சஞ்சு சாம்சன் அடித்த பந்தை சாய் ஹோப் கேட்ச் செய்தார். இந்த கேட்சானது எல்லைக்கோட்டைகிற்கு அருகே சாய் ஹோப் சாய்வது போல தெரிந்தது. பின்னர் மூன்றாவது நடுவர் இதற்கு அவுட் என்று அறிவித்தார். இதற்கு சஞ்சு சாம்சன் களத்தில் உள்ள நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சஞ்சு சாம்சனுக்கு ஐபிஎல் நிர்வாகம் போட்டி ஊதியத்திலிருந்து 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
நடிகர் தனுஷுக்கு வெற்றி வேல் கொடுத்து உற்சாக வரவேற்பளித்த ரசிகர்கள்..
00:37
Video thumbnail
விஜய் வெற்றி பெறுவாரா?
01:11
Video thumbnail
மே 4-க்கு பிறகு தவெக தொண்டர்களின் மனநிலை..
01:29
Video thumbnail
தவெக அமைச்சரவை பட்டியல் வெளியீடு..
01:08
Video thumbnail
தவெக அமைச்சரவை பட்டியல் வெளியீடு | மே 4-க்கு பிறகு தவெக தொண்டர்களின் மனநிலை | TVK | Vijay | Election
13:32
Video thumbnail
திருமணம் முடிந்த கையோடு வந்து வாக்கு செலுத்திய புதுமண தம்பதி
01:15
Video thumbnail
சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் ஜனநாயக கடமையாற்றிய சூர்யா, ஜோதிகா
01:15
Video thumbnail
சென்னை வளசரவாக்கத்தில் தனது மனைவியுடன் வந்து வாக்களித்த நடிகர் யோகிபாபு
01:32
Video thumbnail
சென்னை நீலாங்கரை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார் விஜய்
01:00
Video thumbnail
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் சேவியர் மிடில் ஸ்கூலில் வாக்களித்தார் நடிகை த்ரிஷா
01:11
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img