spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ஐபிஎல் நிர்வாகம் போட்டி ஊதியத்திலிருந்து 30% அபராதம் விதித்துள்ளது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 55 லீக் போட்டிகள் நடந்துள்ளன. நேற்று 56வது லீக் போட்டி நடைபெற்றது. டெல்லி உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 56வது லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து டெல்லி அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. டெல்லி அணியில் அதிகபட்சமாக அபிஷேக் போரேல் 65 ரன்கள் குவித்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 221 ரன்கள் குவித்தது.

பின்னர் 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ராஜஸ்தான் அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. அணியின் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 86 ரன்கள் குவித்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் 8 விக்கெட்டுகள் இழந்து 201 ரன்கள் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் ஸ்டேட் திசையில் சஞ்சு சாம்சன் அடித்த பந்தை சாய் ஹோப் கேட்ச் செய்தார். இந்த கேட்சானது எல்லைக்கோட்டைகிற்கு அருகே சாய் ஹோப் சாய்வது போல தெரிந்தது. பின்னர் மூன்றாவது நடுவர் இதற்கு அவுட் என்று அறிவித்தார். இதற்கு சஞ்சு சாம்சன் களத்தில் உள்ள நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சஞ்சு சாம்சனுக்கு ஐபிஎல் நிர்வாகம் போட்டி ஊதியத்திலிருந்து 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
விருத்தாச்சலத்தில் சட்டமன்ற அலுவலகம் திறப்பு.. வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா..
00:23
Video thumbnail
தவெக எம்.எல்.ஏ பல்லவியுடன் நடந்த பிரச்சனை என்ன? - சென்னை மேயர் பிரியா விளக்கம்..
01:43
Video thumbnail
8200 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு... முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
00:24
Video thumbnail
சென்னை தரமணி- வேளச்சேரி ரோடு மடிப்பாக்கத்தில் சென்னை குடிநீர் வாரிய வளாகத்தில் பயங்கர தீ விபத்து
01:48
Video thumbnail
தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயுடன் காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் சந்திப்பு
00:43
Video thumbnail
கர்நாடக முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பு
01:44
Video thumbnail
கலைஞர் எனும் மானமுள்ள சுயமரியாதைக்காரர் | சரித்தரத்திற்கு சொந்தக்காரர் | Kalaignar Karunanidhi
18:55
Video thumbnail
விஜய் புலி அல்ல - பூனை குட்டி | விஜய்யால் ஒன்றிய அரசை எதிர்க்க முடியாது | Vijay | CM | PM | Modi
16:25
Video thumbnail
100% நான் எந்த இடைத்தேர்தலிலும் நிற்கப் போவதில்லை - திருமாவளவன்
02:07
Video thumbnail
தேர்தலுக்குப் பிறகு தி.மு.க கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை.. சிதறிவிட்டதாக, திருமாவளவன் பேச்சு
02:10
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img