spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ஐதராபாத் அணிக்கு 166 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று நடைபெற்ற 18வது லீக் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி முதலாவது பேட்டிங்கில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 165 ரன்கள் எடுத்துள்ளது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று நடைபெறவுள்ள 18வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் பட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஐதராபாத் அணியை பொறுத்தவரை தனது தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா அணியிடம் வீழ்ந்தது. இரண்டாவது ஆட்டத்தில் மும்பை அணியை அதிரடியாக வீழ்த்தியது 3வது ஆட்டத்தில் குஜராத் அணியிடம் தோல்வியை தழுவியது. சென்னை அணியை பொறுத்தவரை முதல் ஆட்டத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது. அடுத்த ஆட்டத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது. 3வது ஆட்டத்தில் டெல்லி அணியிடம் தோல்வியை தழுவியது. இவ்விரு அணிகளும் இதுவரை 19 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 14 முறையும் ஐதராபாத் அணி 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து சென்னை அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரச்சின் ரவிந்திரா 12 ரன்களும் ருத்ராஜ் கெய்க்வாட் 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரஹானே 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்ததாவது களமிறங்கிய சிவம் துபே 45 ரன்களும் ஜடேஜா 31 ரன்களும், எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 165 ரன்கள் எடுத்தது. பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி விளையாடவுள்ளது.

Video thumbnail
மெக்சிகோ நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு
00:46
Video thumbnail
இந்தியாவின் மதவெறுப்பு பிரச்சாரம் | அமெரிக்கா கொடுக்கும் நெருக்கடி | India | America
13:23
Video thumbnail
சென்னை தலைமைச் செயலகத்தில் ஊழியர் கோரிக்கைகள் | அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
01:21
Video thumbnail
வைகோவின் சமத்துவ நடைபயணத்தினை துவக்கி வைக்க திருச்சி வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
00:58
Video thumbnail
கிறிஸ்தவர்கள் தாக்குதல் விவகாரம் | மௌனம் காக்கும் விஜய், சீமான்
01:20
Video thumbnail
இசைஞானி இளையராஜா பாட்டுப்பாடி ரசிகர்களுக்கு வாழ்த்து
00:35
Video thumbnail
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள்
00:24
Video thumbnail
ஆவடி பொதுமக்களுடன் சேர்ந்து, புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடிய போலீசார்
00:39
Video thumbnail
"அர்ஜுனன் பேர் பத்து என்னுடைய 300-வது படம். அனைவருக்கும் நன்றி”- நடிகர் யோகி பாபு
01:02
Video thumbnail
ஆவடி காவல் ஆணையரகத்தில், பிரேம் ஆனந்த் சின்ஹா புதிய ஆணையராகப் பொறுப்பேற்றார்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img