spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ஆவடி மாநகராட்சி ஜனவரி 2025 முதல் விரிவுபடுத்தப்படும்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஆவடி மாநகராட்சி ஜனவரி 2025 முதல் விரிவுபடுத்தப்படும் ஆவடி மாநகராட்சியுடன் புதிதாக இனைக்கப்பட்ட பகுதிகள் !
சென்னைக்கு அருகில் உள்ள ஆவடி மாநகராட்சி 19 கிராம பஞ்சாயத்துகளை இணைத்து, அவற்றின் எல்லைகளை விரிவுபடுத்த அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆவடி மாநகராட்சியுடன் 3 நகராட்சிகள் மற்றும் 19 கிராம ஊராட்சிகளை இணைக்க முடிவு செய்துள்ளதாக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி திருவேற்காடு நகராட்சி, திருநின்றவூர் நகராட்சி மற்றும் பூவிருந்தவல்லி நகராட்சி ஆகிய 3 நகராட்சிகளை ஆவடி மாநகராட்சியுடன் இணைந்துள்ளனர்.

வானகரம் ஐயப்பாக்கம் நெமிலிச்சேரி, அடையாளம் பட்டு, நடுக்குத்தகை, காட்டுப் பாக்கம், சென்னீர்குப்பம் , வரதராஜபுரம், நசரத்பேட்டை, அகரம் மேல், பனவீட்டு தோட்டம், பரிவாக்கம், கண்ணப்பாளையம், சோராஞ்சேரி, மோரை, வெள்ளனூர், பாலவேடு, மேப்பூர், கருணகரச்சேரி ஆகிய 19 ஊராட்சிகளை இணைத்து முதற்கட்ட அறிக்கையை தயாரித்து வெளியிட்டுள்ளது.

இந்த இணைப்பின் படி ஆவடி மாநகராட்சி 65 சதுர கிலோ மீட்டரில் இருந்து 188 சதுர கிலோ மீட்டராக விரிவடைகிறது.

புதிதாக இனைக்கப்படும் 19 கிராம ஊராட்சிகளின் மக்கள் தொகை 1,77,663 ஆகும். திருவேற்காடு நகராட்சி, திருநின்றவூர் நகராட்சி மற்றும் பூவிருந்தவல்லி நகராட்சி ஆகிய 3 நகராட்சிகளின் ஊராட்சிகளின் மக்கள் தொகை 6,95,212 ஆகும். ஆவடி மாநகராட்சியின் மக்கள் தொகை 3,45,996 ஆகும். இவை அனைத்தையும் இனைத்தால் மொத்தம் 12 லட்சத்திற்கு மேல் அதிகரிக்கும்.

ஆவடி மாநகராட்சி விரிவாக்கம்; அதிகாரப் பூர்வ அறிவிப்பு.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் டி.கார்த்திகேயன் கூறியதாவது ,பஞ்சாயத்து தலைவர்களின் பதவிக்காலம் 2024 இறுதி வரை இருப்பதால், அதன் பிறகு தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளில் பஞ்சாயத்துகள் இணைக்கப்படும். டிசம்பர் 2024 அல்லது ஜனவரி 2025க்குள் இந்த மேம்படுத்தல் (Up-gradation) எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போன்று நேற்று தமிழ்நாடு முழுக்க பல மாநகராட்சிகள், நகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. அரியலூர் நகராட்சி, செங்கல்பட்டு நகராட்சி, மன்னார்குடி, திருவாரூர் மற்றும் விருதுநகர் நகராட்சிகள், பொன்னேரி, ஆரணி, திருவதிபுரம் & வந்தவாசி நகராட்சிகள் என்று பல மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருட்டு.. CCTV காட்சி வெளியீடு!
00:33
Video thumbnail
அம்பத்தூரில் நிரந்தர பணி கோரி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்..
02:26
Video thumbnail
"எங்க ஆபீஸ்க்கு ஏற்கெனவே ஆர்டர் பண்ண ஷோபா தான் வந்தது"
02:13
Video thumbnail
எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் செய்த சாதனை
01:08
Video thumbnail
'கருப்பு' ரிலீஸ் குறித்து கண்கலங்கியபடி இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
01:37
Video thumbnail
54 ஆண்டுகால கட்சிக்கு வந்த சோதனை
01:10
Video thumbnail
முகத்தை மூடிக்கொண்டு வந்தது யார்? -எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
01:16
Video thumbnail
"ஜோசியரை பர்சனலாக வைத்துக்கொள்ளுங்கள்" - பிரேமலதா விஜயகாந்த் காட்டம்
01:38
Video thumbnail
ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
01:35
Video thumbnail
முதலமைச்சர் விஜய்க்கு சௌமியா அன்புமணி வாழ்த்து..
01:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img